என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ஆற்காட்டில் அ.தி.மு.க சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கலவை:

    ஆற்காடு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் பொன்விழா எழுச்சி மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர கழக செயலாளர் ஜிம். சங்கர் தலைமை தாங்கினார்.திமிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சொறையூர் குமார், ஆற்காடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வளவனூர் அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ, மற்றும் எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு மதுரையில் நடந்த மாநாடுகளை பற்றி விளக்கினர். உடன் அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், ராணிப்பேட்டை மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தர்,மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், பிச்சமுத்து.

    கூட்டுறவு சங்க தலைவர் சுமதாங்கி ஏழுமலை, மண்டல தகவல் தொழில்நு ட்ப துணை செயலாளர் அஞ்சலி கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு, வாலாஜா நகர செயலாளர்மோகன், ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    • அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ,கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் கீழ்கண்ட உதவி மையங்கள் தனியாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் புதிதாக பயன்பெற வேண்டுமெனில் எவ்வாறு விண்ணப்பிப்பது உட்பட இது தொடர்பாக ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள்.

    பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி அவர்களுக்கு திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியினரால் பிடித்தம் செய்யப்ப ட்டிருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    உதவி மையங்கள்:-

    ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அலுவலக கண்காணி ப்பாளர் சுப்பிரமணி-செல்-9489985791.

    ராணிப்பே ட்டை வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், பழனிராஜன்-செல்-9489985792. அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்,ஆனந்தன் -செல் -9489985793. வாலாஜா தாலுகா அலுவலகம்,முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளங்கோவன்-செல்- 9489985794. ஆற்காடு தாலுகா அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர், தமிழழகன்-செல் -9489985795. சோளிங்கர் தாலுகா அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஜெயபால்- செல்-9489985796.

    கலவை தாலுகா அலுவலகம், முதுநிலை வரு வாய் ஆய்வாளர்,ஆனந்தன்-செல்- 9489985797. அரக்கோணம் தாலுகா அலுவலகம் ,முதுநிலை வருவாய் ஆய்வாளர்,உமாபதி- செல்-9489985798. நெமிலி தாலுகா அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வெங்கடேசன்- செல் -9489985799.

    இந்த வசதியை தகுதியுள்ள அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஆற்காடு நகர பா.ஜ.க சார்பில் நடந்தது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஆற்காடு நகரத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் மனோகரன், வர்த்தக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், கல்வியாளர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஆச்சி. ரவி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் லோகநாதன், மண்டல் பொதுச் செயலாளர்கள் சுனில் குமார் சரவணன், நகர பொருளாளர் கமலக்க ண்ணன், நகர துணை தலைவர்கள் ஹேமந்த் சர்மா, குமரவேல், தியாகராஜன், நகர செயலாளர் சுரேஷ். சந்திரசேகர், கல்வியாளர் பிரிவு நகர தலைவர் பி.தினேஷ்குமார், துணைத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் தேசிய, மாநில, மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்கள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் பகு தியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). டிரைவர். இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றார். அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் அந்த வழியாக வந்த ரெயில் சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீ சார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் அண்ணா சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), பீடி சுற்றும் கூலி தொழிலாளி. நேற்று இரவு ஆற்காடு, மேல்விஷாரம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அந்த நேரத்தில் சுப்பிரமணி கீழ்விஷாரம் மாரியம்மன் கோவில் அருகே சைக் கிளில் சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து சுப்பிர மணி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி கழிவுநீர் கால் வாயில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல்விஷா ரம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் மழை யையும் பொருட்படுத்தாமல் கீழ்விஷாரம் அண்ணா சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • 3 மையங்களில் நடைபெற்றது
    • 315 பேர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல் முறைகளின் படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப்பண்பாட்டு திருவிழா போட்டிகள் 3 மையங்களில் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி ,தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் தெரிவிக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவிஇசை, நடனம், நாடகம் , காட்சிக்கலை, ஓவியம் எனும் தலைப்புகளில் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

    இந்த கலைப்பண்பாட்டு திருவிழாவில் மாணவர்கள் ஓவியம், பாடல், நடனம், களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொம்மை, விலங்கு, சாமி போன்ற உருவங்கள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந்த போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 315 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 20 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.

    இதில் தலைமை ஆசிரியர்களும், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 2ஆயிரத்து 610 பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகை க்கான ஏ.டி.எம் அட்டைகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 614 ரேசன் கடைகளில் 3 லட்சத்து 48ஆயிரம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    அவர்களிடமிருந்து 2 லட்சத்து 29 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சுமார் 1½ லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்ப ட்டுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சி வரும்போ தெல்லாம் மகளிர்க்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி, மக்களாட்சி என்றார்.

    நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயந்தி, ஜி.கே.பள்ளி நிர்வாக இயக்குனர் வினோத்காந்தி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், லட்சுமி பாரி, ஒன்றியக்குழு தலைவர்கள் சேஷா வெங்கட், வடிவேலு, அசோக், புவனேஸ்வரி, நிர்மலா சவுந்தர், கலைக்குமார், அனிதா குப்புசாமி, பேரூராட்சி தலைவர்கள் நாகராஜன், சங்கீதா மகேஷ் உள்பட நகரமன்ற, ஒன்றியக்குழு, பேரூராட்சி, ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திட்ட இயக்குநர் லோகநாயகி நன்றி கூறினார்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு அரக்கோணம் நகர தி.மு.க செயலாளர் வி.எல்.ஜோதி தலைமையில், தி.மு.க வினர் பேரணியாக எஸ்.ஆர்.கேட் பகுதியில் தொடங்கி பழனி பேட்டை, அம்பேத்கர் நகர், மார்கெட், பழைய பஸ் நிலையம், வழியாக சுவால்பேட்டை பழைய நகராட்சி அலுவலகம் வரை சென்றனர்.

    பின்னர் பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    உடன் மாவட்ட பொருளாளர் மு.கண்ணையன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.தமிழ்ச்செல்வன், பசுபதி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், நகர துணை செயலாளர் தமிழ்வாணன், நகர மன்ற அவைத் தலைவர் துரை. சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் கே.எம்.பி.பாபு, மாலின் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குண்டர் சட்டத்தில் கைது
    • மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா, பில்லாந்தி, மேல்சீசமங்கலம், கிராமத்தை சேர்ந்த படப்பை விக்கி (எ) விக்னேஷ் (26) என்பவரை போலீசார் கடந்த மாதம் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் படப்பை விக்கி (எ) விக்னேனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • போலீசார் ஏற்றுக்கொண்டனர்
    • குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    • இனிப்புகள் வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நெமிலி பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய குழு தலைவருமான வடிவேலு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி, நிர்வாகிகள் புருஷோத்தமன் ஹரிகிருஷ்ணன் சங்கர், முகமது அப்துல் ரகுமான், வக்கீல் கார்த்திகேயன், வடகண்டிகை பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அப்போது 2-வது பிளாட்பாரத்தில் பெங்களூர்-அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.பீ.எம். சர்ச் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் போதையில் அங்கு வந்தார். அவர் 2-வது பிளாட்பார தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலை நிறுத்தப் போவதாக ரகளையில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

    ரெயில் வருவதை கண்டதும் போதை வாலிபர், தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தட்டு தடுமாறினார்.

    இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் போதை வாலிபர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.

    ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த நபர் இறந்துவிட்டதாக கருதி அருகில் சென்று பார்த்தனர்.

    ஆனால் போதை வாலிபர் உடலில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. போதையில் வாலிபர் ரெயிலை நிறுத்த முயற்சி செய்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×