search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
    X

    அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

    • ஆற்காட்டில் அ.தி.மு.க சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கலவை:

    ஆற்காடு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் பொன்விழா எழுச்சி மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர கழக செயலாளர் ஜிம். சங்கர் தலைமை தாங்கினார்.திமிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சொறையூர் குமார், ஆற்காடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வளவனூர் அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ, மற்றும் எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு மதுரையில் நடந்த மாநாடுகளை பற்றி விளக்கினர். உடன் அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், ராணிப்பேட்டை மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தர்,மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், பிச்சமுத்து.

    கூட்டுறவு சங்க தலைவர் சுமதாங்கி ஏழுமலை, மண்டல தகவல் தொழில்நு ட்ப துணை செயலாளர் அஞ்சலி கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு, வாலாஜா நகர செயலாளர்மோகன், ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    Next Story
    ×