என் மலர்
ராணிப்பேட்டை
- ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
- ரூ.40 லட்சம் ஒதுக்கீடு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பெரப்பேரி ஊராட்சியில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு சாலை அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், துணைத்தலைவர் சுமதி ஐயப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
- ரூ.1000 கிடைக்காததால் வந்திருந்தனர்
- உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டு நேற்று முதல் செயல்படுகின்றன.
நேற்று வாலாஜா தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்களின் குடும்ப அட்டையை வைத்து செல்போன் செயலியில் சரிபார்த்து உதவி மைய அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிவித்தனர்.
இதில் செல்போன் செயலியில் அதிகாரிகள் விண்ணப்பத்தின் நிலையை அறிய முயன்ற போது சர்வரால் தாமதம் ஏற்பட்டதால் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது தமிழ்நாடு முழுவதும் பணி நடைபெறுவதால் செயலி சர்வரில் கால தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் வாலாஜா தாலுகா அலுவல கத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மேல் முறையீடு செய்தால் கண்டிப்பாக தகவல்கள் சரிபார்க்கப்பட்டு அனைத்து தகுதியான பெண்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஆகவே, உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் வெங்கடேசன் உடனிருந்தார்.
- ஆற்காடு அரசு ஆண்கள் பள்ளியில் நடந்தது
- புவி வெப்பமடைதல் குறித்தும் விளக்கி பேசினார்
கலவை:
ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அப்சர் பாஷா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஜே.ஆர்.சி அமைப்பாளர் க.வே.கிருபானந்தம் கலந்து கொண்டு சர்வதேச ஓசோன் தினம் குறித்தும், புவி வெப்பமடைதல் குறித்தும் விளக்கி பேசினார்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளில் ரசாயனம் உள்ளதால் சாதாரண களிமண் சிலைகளையே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கிரீன் டிரஸ்ட் இயக்குனரும், ராணிப்பேட்டை மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளருமான நா.மார்க்கசகாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இயற்கை வழி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் உடற் கல்வி இயக்குனர் பிரபு, பொறியாளர் முகமது அலி, ஜெயக்குமார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
- போலீசார் விசாரணை
திமிரி:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குட்டை புறம்போக்கு இடத்தில் இரவோடு இரவாக சமன் செய்து கல் விநாயகர் சிலை வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது
- பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்
ராணிப்பேடட்டை:
வாலாஜா நகரில் அணைக்கட்டு சாலையில் பழமைவாய்ந்த ஸ்ரீ சுந்தரவிநாயகர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ரூ.25 லட்சம். மதிப்பில் 18 அடி உயரத்தில் 3 டன் எடைக்கொண்ட தேர் செய்யப்பட்டு கடந்த 10-ந் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் மாலையில் முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது.அலங்கரிங்கப்பட்ட நேரில் சுந்தரவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாண வேடிக்கை, மங்கல வாத்தியங்களுடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது .
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுதேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
- பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த தகர குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் மனைவி ஜெபக்குமாரி (வயது 33) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராபர்ட்டும், ஜெபகுமாரியும் தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராபர்ட் மற்றும் ஜெபக்குமாரி ஆகியோர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பைக்கில் வந்தனர்.
பொன்னை சாலையில் உள்ள அணைக்கட்டு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபக்குமாரி நேற்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இதை தொடர்ந்து ஜெபக்குமாரியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்து தானம் வழங்கியுள்ளனர்.
விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்காட்டில் அ.தி.மு.க சார்பில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கலவை:
ஆற்காடு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் பொன்விழா எழுச்சி மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர கழக செயலாளர் ஜிம். சங்கர் தலைமை தாங்கினார்.திமிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சொறையூர் குமார், ஆற்காடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வளவனூர் அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ, மற்றும் எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு மதுரையில் நடந்த மாநாடுகளை பற்றி விளக்கினர். உடன் அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், ராணிப்பேட்டை மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தர்,மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், பிச்சமுத்து.
கூட்டுறவு சங்க தலைவர் சுமதாங்கி ஏழுமலை, மண்டல தகவல் தொழில்நு ட்ப துணை செயலாளர் அஞ்சலி கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு, வாலாஜா நகர செயலாளர்மோகன், ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
- அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
- கலெக்டர் வளர்மதி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ,கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் கீழ்கண்ட உதவி மையங்கள் தனியாக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் புதிதாக பயன்பெற வேண்டுமெனில் எவ்வாறு விண்ணப்பிப்பது உட்பட இது தொடர்பாக ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் இந்த உதவி மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தீர்த்து வைப்பார்கள்.
பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி அவர்களுக்கு திட்டம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், திட்டத்தில் பயனாளியாக இருந்தும் தொகை பெறுவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெறப்பட்ட தொகை வங்கியினரால் பிடித்தம் செய்யப்ப ட்டிருந்தாலோ இந்த உதவி மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
உதவி மையங்கள்:-
ராணிப்பே ட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் அலுவலக கண்காணி ப்பாளர் சுப்பிரமணி-செல்-9489985791.
ராணிப்பே ட்டை வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகம் , வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், பழனிராஜன்-செல்-9489985792. அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர்,ஆனந்தன் -செல் -9489985793. வாலாஜா தாலுகா அலுவலகம்,முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளங்கோவன்-செல்- 9489985794. ஆற்காடு தாலுகா அலுவலகம் இளநிலை வருவாய் ஆய்வாளர், தமிழழகன்-செல் -9489985795. சோளிங்கர் தாலுகா அலுவலகம் முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஜெயபால்- செல்-9489985796.
கலவை தாலுகா அலுவலகம், முதுநிலை வரு வாய் ஆய்வாளர்,ஆனந்தன்-செல்- 9489985797. அரக்கோணம் தாலுகா அலுவலகம் ,முதுநிலை வருவாய் ஆய்வாளர்,உமாபதி- செல்-9489985798. நெமிலி தாலுகா அலுவலகம், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வெங்கடேசன்- செல் -9489985799.
இந்த வசதியை தகுதியுள்ள அனைத்து பெண்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஆற்காடு நகர பா.ஜ.க சார்பில் நடந்தது
- அன்னதானம் வழங்கப்பட்டது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆற்காடு நகரத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாநில செயலாளர் மனோகரன், வர்த்தக பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், கல்வியாளர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஆச்சி. ரவி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் லோகநாதன், மண்டல் பொதுச் செயலாளர்கள் சுனில் குமார் சரவணன், நகர பொருளாளர் கமலக்க ண்ணன், நகர துணை தலைவர்கள் ஹேமந்த் சர்மா, குமரவேல், தியாகராஜன், நகர செயலாளர் சுரேஷ். சந்திரசேகர், கல்வியாளர் பிரிவு நகர தலைவர் பி.தினேஷ்குமார், துணைத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தேசிய, மாநில, மாவட்ட அணி பிரிவு நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், கிளை தலைவர்கள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் பகு தியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). டிரைவர். இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றார். அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது திருத்தணி - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் அந்த வழியாக வந்த ரெயில் சீனிவாசன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீ சார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
- போக்குவரத்து பாதிப்பு
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரம் அண்ணா சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 53), பீடி சுற்றும் கூலி தொழிலாளி. நேற்று இரவு ஆற்காடு, மேல்விஷாரம் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
அந்த நேரத்தில் சுப்பிரமணி கீழ்விஷாரம் மாரியம்மன் கோவில் அருகே சைக் கிளில் சென்றார். அப்போது மின்சார ஒயர் அறுந்து சுப்பிர மணி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி கழிவுநீர் கால் வாயில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேல்விஷா ரம் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்டோர் மழை யையும் பொருட்படுத்தாமல் கீழ்விஷாரம் அண்ணா சாலை யில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- 3 மையங்களில் நடைபெற்றது
- 315 பேர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் செயல் முறைகளின் படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைப்பண்பாட்டு திருவிழா போட்டிகள் 3 மையங்களில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி ,தனியார் பள்ளிகளை சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் தெரிவிக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவிஇசை, நடனம், நாடகம் , காட்சிக்கலை, ஓவியம் எனும் தலைப்புகளில் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
இந்த கலைப்பண்பாட்டு திருவிழாவில் மாணவர்கள் ஓவியம், பாடல், நடனம், களிமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு பொம்மை, விலங்கு, சாமி போன்ற உருவங்கள் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் 315 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 20 மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
இதில் தலைமை ஆசிரியர்களும், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களும் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர்.






