என் மலர்
ராணிப்பேட்டை
- படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
- நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் வசதி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 43 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திடவும், உற்பத்தியை பெருக்கிடவும், ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், மகளிர்கள் சுய தொழில்களை தொடங்கவும் பல்வேறு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்த ப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் தொழில் வளத்தை மேம்படுத்த படித்த பல்வேறு மானிய கடனுதவி திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதியாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 பேருக்கு ரூ.1கோடியே 83 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
வருகிற 2024 ஜனவரி மாதம் தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநில அளவில் 36ஆயிரத்து 633 நிறுவனங்கள் ரூ.54ஆயிரத்து 950 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற்று தொழில் வளத்தை பெருக்குவதே உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கமாகும்.
இதில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 667 நிறுவனங்கள் ரூ.1000 கோடிமதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இது வரையில் 34 நிறுவனங்கள் ரூ.146கோடியே 53 லட்சம் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு துறைகளின் கடனுதவி திட்டங்கள் மூலம் வங்கிகளின் வாயிலாக 8ஆயிரத்து 33 பேருக்கு ரூ.365 கோடி மதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் (பொறுப்பு)அமுதாராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள்
கலைகுமார், வடிவேலு, புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்ச் செல்வி அசோகன், பேரூராட்சித் தலைவர் நாகராஜன்,தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் கௌரி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கோமதி, மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிற்சங்கத் தலைவர் சந்திரஹாசன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கி பேசினார்.
மாவட்ட துணை தலைவர் மோகன், முருகன், ராணி வெங்கடேசன், வசீகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் காஜா, ஏ.கே.சுந்தரமூர்த்தி, சுவேதா பானு, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குக்கர் வெடித்த சத்தம் கேட்டு ஓடியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஐயனேரி மேடுவை சேர்ந்தவர் சரவணன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று கியாஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதனால் அலறி அடித்துக் கொண்டு செல்வி வெளியே ஓடினார். இதில் கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்வி இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெங்களூருக்கு செல்வதாக அதிகாரிகள் தகவல்
- உறுதியான பெயர் பலகை வைக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 8. 45-க்கு வந்தது.
இந்த ரெயிலின் கடைசி பெட்டியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கோவை எக்ஸ்பிரஸ் என்றும், மற்ற பெட்டிகளில் பெங்களூர்- சென்னை-கோவை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்றும் இருந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
அந்த ரெயில் கோவைக்கு செல்கின்றதா அல்லது பெங்களூருக்கு செல்கின்றதா என தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர். பின்னர் அருகே இருந்த அதிகாரிகளியிடம் கேட்டபோது:-
அந்த ரெயில் பெங்களூருக்கு செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூர் செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறினர்.
இதுபோன்று ரெயில் பெட்டிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் பலகைகள் வைப்பதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவர்.
எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயணிகளின் குழப்பத்தை நீக்கும் வகையில் அவர்களுக்கு இந்த ரெயில் எங்கு செல்கின்றது என்ற உறுதியான பெயர் பலகையை வைத்து ரெயிலை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரி குட்டி தலைமை தாங்கிளார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு 42 மாணவ மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைவழங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில்தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 27 மாணவர்க ளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்க ப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றிய குழு துணைத்த லைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி அருணாச்சலம் (சிறுணமல்லி), ஆனந்தி பாலசுப்பிர மணியன் (நாகவேடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கரி செல்லப்பன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைஞர்தாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வாலாஜாவில் உள்ள அரசினர் ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விமல்குமார், அமுதாமணி, பெல் பொது மேலாளர் சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் சீனிவாசன்.
விடுதி காப்பாளர் மாலதி உள்பட கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு வருட காலம் காவலில் வைக்க உத்தரவு
- ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த, ஆற்காடு அப்பாய் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன்(எ) செல்லா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்செல்வன் (எ) செல்லாவை ஒரு வருட காலம் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
- நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோவிந்ததாங்கலை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 30). தொழிலாளி. இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டின் மேல் மாடிக்கு சென்று கதவை உடைத்தனர். பீரோவில் இருந்த 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை குடும்பத்தினர் அனைவரும் எழுந்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது .
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன
- அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க எடுத்து சென்றனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவே ரிப்பாக்கம், நெமிலி, வாலாஜா, சோளி ங்கர், அரக்கோணம் மற்றும் ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிலையில், காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட பொருளாளர் ரகு, ஆட்டோ சங்க துணை தலைவர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருப்பாளர் தினகரன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன், வேலூர் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ், பொதுச் செயலாளர் ஜெகன், பேரூராட்சி துணை தலைவர் தீபிகாமுருகன், ஆகியோர் கலந்து விஜர்சன ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
இந்த ஊர்வலம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் தொடங்கி, பஜார் வீதி வழியாக சென்று சோமநாத ஈஸ்வரர் கோயில் குளக்கரையில் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்தது வாலாஜா நகரம் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமையும் உடையது.
வர்த்தக நகரமாகவும் விளங்கி வருகிறது. சிறப்புகள் வாய்ந்த வாலாஜா நகரத்திற்கான பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் வாலாஜா நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது.
சிறிய அளவிலேயே இருந்தாலும் இந்த பஸ் நிலையத்தின் வழியே தான் சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கான பஸ்கள் வந்து செல்கிறது.
சுற்றுப்புற கிராமங்களுக்கான அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வருவதால் கிராமங்களிலிருந்து வேலை நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்கள், பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு அதிகம் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் இருந்த கடைகளின் முன்பாக வெயில், மழை காலங்களில் ஒதுங்கி நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வாலாஜா நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 8லட்சம் மதிப்பில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புனரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்து பூமி பூஜையும் போடப்பட்டது.
பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்காக பஸ் நிலையத்திலிருந்த அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.
மழைக்காலம் தொடங்கி விட்டதால் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் மழையில் நனையாமல் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலைய பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள், பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 359.1 மி.மீ.,
- விடிய விடிய கொட்டி தீர்த்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் நேற்று நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலை வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து இன்று காலையிலும் மழைதூறல் பெய்த வண்ணம் உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை விபரம்:-
ராணிப்பேட்டையில் 67.8.மி.மீ., பாலாறு அணைக்கட்டு 14.8 மி.மீ., வாலாஜாவில் 42.5 மி.மீ., அம்மூரில் 41 மி.மீ., ஆற்காட்டில் 92.6.மி.மீ., மின்னலில் 8.4 மி.மீ., காவேரிப்பாக்கத்தில் 43 மி.மீ., பனப்பாக்கத்தில் 2.8 மி.மீ., கலவையில் 46.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 359.1 மி.மீ., மாவட்ட சராசரி 32.6 5மி.மீ.ஆகும்.
- பொதுமக்கள் அச்சம்
- செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பாரதி நகரில் 4 மாடி கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த ஆண்டு முதல் பல்வேறு துறை அலுவலகங்க ளுடன்செ யல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் அரசு அலுவலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள், பிரமுகர்கள் என பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று கீழ் தளம் எப்.ப்ளாக்கில் செயல்பட்டு வரும் மருத்துவ காப்பீடு அலுவலகம் எதிரே நேற்று மாலை பாம்பு ஒன்று திடீரென புகுந்தது.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு பணியாற்றிய ஊழியர்களே அந்த பாம்பினை விரட்டினர்.
கலெக்டர் அலுவலக பின்புறம் அதிகளவில் செடி,கொடிகள் நிறைந்து காணப்படுவதால் அங்கிருந்து பாம்பு வந்திருக்கலாம் . எனவே அங்குள்ள செடி, கொடி களையும், தேவையற்ற பொருட்களையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






