என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டின் முன்பு போலீசார் விசாரணை நடத்திய காட்சி. பீரோ உடைக்கப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.

    தொழிலாளி வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை

    • நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கோவிந்ததாங்கலை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 30). தொழிலாளி. இவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டின் மேல் மாடிக்கு சென்று கதவை உடைத்தனர். பீரோவில் இருந்த 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை குடும்பத்தினர் அனைவரும் எழுந்து வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது .

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×