search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழே விழுந்து பெண் சாவு
    X

    கீழே விழுந்து பெண் சாவு

    • குக்கர் வெடித்த சத்தம் கேட்டு ஓடியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஐயனேரி மேடுவை சேர்ந்தவர் சரவணன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று கியாஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதனால் அலறி அடித்துக் கொண்டு செல்வி வெளியே ஓடினார். இதில் கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்வி இறந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×