என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 100 கிலோ சிக்கியது
    • வேலூர் டிரைவர் கைது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் வாலாஜா போலீசார் நேற்று வாலாஜா- பாலாறு அணைக்கட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினிவேன் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் சென்றது. இதை பார்த்த போலீசார் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் 6 அட்டை பெட்டிகளில் சுமார் 100 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. வேலூரில் இருந்து எடுத்து வந்து கிராமப்புறங்களில் உள்ள பங்கடைகளில் விநியோகம் செய்ய வந்ததும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் மினிவேனுடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வேன் டிரைவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டது

    கலவை:

    மேல்விஷாரம் நகராட்சியில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் அஞ்சுமன் தெரு மற்றும் பெரிய மசுதி தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.

    இதற்கான கல்வெட்டினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்.

    இதில் கலெக்டர் வளர்மதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, நகரமன்றத் தலைவர் முஹமது ஹமீன், துணைத் தலைவர் குல்ஜார் அஹமது, நகராட்சி ஆணையாளர் (பொ) சந்தானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்
    • 6 வருடங்களாக காதலித்து வந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மானாமதுரை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன்(28).எம்.காம் படித்துவிட்டு தற்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இவரும் காஞ்சிபுரம் மாவட்டம், வேளியூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் மகள் சாந்தி(23) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

    வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து நெமிலி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழுக்கண் மற்றும் மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். போலீஸ் நிலையங்களில் புதியதாக பதிவான வழக்குகள் , நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடப்பு மாதம் எவ்வித வழக்கும் நிலுவையிலோ, புதியதாகவோ பதிவாகவில்லை என்பதை குறிப்பிட்டு இது தொடர்புடைய வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு குழு உறுப்பினர் முன்னிலையில் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

    மேலும் வழக்கு தொடர்புடைய ஆவணங்களான சாதிச் சான்றிதழ்கள், வாரிசு சான்றிதழ்கள் மற்றும் சேதமதிப்பீடு சான்றிதழ்கள் போன்றவை ஏதும் நிலுவையில் உள்ளதா எனவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக ஏதேனும் குற்றச்செயல்கள் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து குழுஉறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, உதவி கலெக்டர் வினோத்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபு, குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன், ரமேஷ் கர்ணா, ஜெயகுமார், ரமேஷ்,சீனிவாசன்,மஞ்சு, கவிதா உள்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த ஓச்சலம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன் (வயது 24), டிராக்டர் டிரைவர். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மோகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மோகன் குடிபோதையில் வீட்டுக் குவந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன் சம்பவதன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார்.

    அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • தந்ைதயை கும்பல் தாக்கிய நிலையில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் விண்ட ர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தனசேகர் என்கிற குட்டியப்பா (வயது 43). இவரது மகன் ஸ்ரீநாத் (16). இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    தந்தை மீது தாக்குதல்

    இந்த நிலையில் ஸ்ரீநாத் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் பழகி வந்துள்ளார். பகல் நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுடன் பொழுதை கழித்து வந்தார்.

    இதனைப் பார்த்த தனசேகர், தனது மகன் ஸ்ரீநாத்தை கண்டித்து, வீட்டுக்கு அழைத்துள்ளார்.

    அப்போது ஸ்ரீநாத் உடன் இருந்த இளைஞர்கள் தகராறு செய்தனர்.

    தனசேகரை பிளேடால் ஆங்காங்கே வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தனசேகர் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு. சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீநாத் தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கி னார்.

    இதனை பார்த்த தனசேகரன் மகன் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து அந்த பகுதி மக்கள் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விண்டர்பேட்டை பகுதியில் கஞ்சா கும்பல் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
    • நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன் வசதி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 43 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திடவும், உற்பத்தியை பெருக்கிடவும், ஏழை, எளிய மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், மகளிர்கள் சுய தொழில்களை தொடங்கவும் பல்வேறு மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்த ப்பட்டுவருகிறது.

    தமிழ்நாட்டில் தொழில் வளத்தை மேம்படுத்த படித்த பல்வேறு மானிய கடனுதவி திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    நடப்பு நிதியாண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 பேருக்கு ரூ.1கோடியே 83 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

    வருகிற 2024 ஜனவரி மாதம் தமிழ்நாடு முதல் அமைச்சர் தலைமையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநில அளவில் 36ஆயிரத்து 633 நிறுவனங்கள் ரூ.54ஆயிரத்து 950 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற்று தொழில் வளத்தை பெருக்குவதே உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கமாகும்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 667 நிறுவனங்கள் ரூ.1000 கோடிமதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் பெற இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இது வரையில் 34 நிறுவனங்கள் ரூ.146கோடியே 53 லட்சம் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் பல்வேறு துறைகளின் கடனுதவி திட்டங்கள் மூலம் வங்கிகளின் வாயிலாக 8ஆயிரத்து 33 பேருக்கு ரூ.365 கோடி மதிப்பில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் ரவிசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஸ்ரீ ராம்ஜி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் (பொறுப்பு)அமுதாராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள்

    கலைகுமார், வடிவேலு, புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்றத் தலைவர்கள் ஹரிணிதில்லை, தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்ச் செல்வி அசோகன், பேரூராட்சித் தலைவர் நாகராஜன்,தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் கௌரி, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் கோமதி, மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிற்சங்கத் தலைவர் சந்திரஹாசன் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் தலைமை தாங்கி பேசினார்.

    மாவட்ட துணை தலைவர் மோகன், முருகன், ராணி வெங்கடேசன், வசீகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி படிவங்கள் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் காஜா, ஏ.கே.சுந்தரமூர்த்தி, சுவேதா பானு, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குக்கர் வெடித்த சத்தம் கேட்டு ஓடியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஐயனேரி மேடுவை சேர்ந்தவர் சரவணன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று கியாஸ் அடுப்பில் குக்கர் மூலம் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென குக்கர் வெடித்தது. இதனால் அலறி அடித்துக் கொண்டு செல்வி வெளியே ஓடினார். இதில் கால் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக செல்வி இறந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெங்களூருக்கு செல்வதாக அதிகாரிகள் தகவல்
    • உறுதியான பெயர் பலகை வைக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 8. 45-க்கு வந்தது.

    இந்த ரெயிலின் கடைசி பெட்டியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கோவை எக்ஸ்பிரஸ் என்றும், மற்ற பெட்டிகளில் பெங்களூர்- சென்னை-கோவை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்றும் இருந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

    அந்த ரெயில் கோவைக்கு செல்கின்றதா அல்லது பெங்களூருக்கு செல்கின்றதா என தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர். பின்னர் அருகே இருந்த அதிகாரிகளியிடம் கேட்டபோது:-

    அந்த ரெயில் பெங்களூருக்கு செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூர் செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறினர்.

    இதுபோன்று ரெயில் பெட்டிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் பலகைகள் வைப்பதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவர்.

    எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயணிகளின் குழப்பத்தை நீக்கும் வகையில் அவர்களுக்கு இந்த ரெயில் எங்கு செல்கின்றது என்ற உறுதியான பெயர் பலகையை வைத்து ரெயிலை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒன்றிய குழு தலைவர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சம்பத்துராயன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குமாரி குட்டி தலைமை தாங்கிளார்.

    சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு 42 மாணவ மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களைவழங்கி பேசினார்.

    இதனை தொடர்ந்து நாகவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில்தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் 27 மாணவர்க ளுக்கும் விலையில்லா சைக்கிள்கள் வழங்க ப்பட்டது.

    இதில் நெமிலி ஒன்றிய குழு துணைத்த லைவர் தீனதயாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜோதி அருணாச்சலம் (சிறுணமல்லி), ஆனந்தி பாலசுப்பிர மணியன் (நாகவேடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகேசன், சங்கரி செல்லப்பன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைஞர்தாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வாலாஜாவில் உள்ள அரசினர் ஆதி திராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியில் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விமல்குமார், அமுதாமணி, பெல் பொது மேலாளர் சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் சீனிவாசன்.

    விடுதி காப்பாளர் மாலதி உள்பட கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×