search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    பெண் தூக்கிட்டு தற்கொலை

    • கடன்‌பிரச்னை காரணமா?
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மனைவி கீதா (வயது 45). இவர் சிப்காட் மலைமேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கீதா தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருந்ததாகவும், மேலும் கடனை கட்ட முடியாததால் மன வேதனையில் இருந்துள்ளார்.

    இதனால் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவலறிந்த சிப்காட் போலீசார் கீதா கடன்பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×