search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.19 கோடியில் புதுப்பிக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளி
    X

    ரூ.1.19 கோடியில் புதுப்பிக்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளி

    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி , திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.

    விழாவில் ஆற்காடு ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன், நகரமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×