search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • ஒரு வருட காலம் காவலில் வைக்க உத்தரவு
    • ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த, ஆற்காடு அப்பாய் தெருவை சேர்ந்த தமிழ்செல்வன்(எ) செல்லா (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் வளர்மதி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்செல்வன் (எ) செல்லாவை ஒரு வருட காலம் குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆணையை ஜெயில் அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    Next Story
    ×