என் மலர்
நீங்கள் தேடியது "சமூக கழிப்பிடம்"
- குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது
- நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பிஞ்சி 11-வது வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.24லட்சத்து 96ஆயிரம் மதிப்பில் புதியதாக சமூக கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதனை நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த சமூக கழிப்பறை கட்டிடம் குளியல் அறை, தண்ணீர் தொட்டி, துணி துவைக்கும் இடம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகராட்சி ஆணையாளர் விநாயகம்,பொறியாளர் பரமுராசு, நகர செயலாளர் பூங்காவனம், நகரமன்ற உறுப்பினர்கள் வினோத்,குமார், கோபிகிருஷ்ணன், ஜெயசங்கீதா உள்பட நகராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






