search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.27 கோடியில் பள்ளி கட்டிடம்
    X

    ரூ.1.27 கோடியில் பள்ளி கட்டிடம்

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • கல்வெட்டினை திறந்து வைத்தார்

    காவேரிப்பாக்கம்:

    வாலாஜா அஐகே உள்ள திருப்பாற்கடல் ஊராட்சியில் உள்ள எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில், 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நபார்டு திட்டத்தின் கீழ் திருப்பாற்கடல், வி.கே.மாங்காடு, ஆற்காடு, திமிரி, கலவை, ஒழுகூர், பனப்பாக்கம், புலிவலம், மகேந்திரவாடி, ரெண்டாடி, சோளிங்கர் உள்ளிட்ட 11 பள்ளிகளில் ரூ.18.23 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் கல்வெட்டினை திறந்து வைத்து பணியினை தொடங்கி வைத்து பேசினார்.

    மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா. ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ஓச்சேரி பாலாஜி, தெய்வசிகாமணி, மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி கணேசன், சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி சுந்தரம், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×