என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்
    X

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்

    • கொசு மருந்து அடிக்கவேண்டும்
    • குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசு மருந்து அடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற்றவேண்டும். குடிநீர் வசதி, கழிவு நீரோடை பராமரிப்பு, உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×