என் மலர்
ராணிப்பேட்டை
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வேலூர் கோட்ட தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார்.
மாநில துணை செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பயன்பாட்டில் உள்ள நிலத்தை மீட்டெடுத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இதனையடுத்து பொது மக்களுக்கு பகவத்கீதை, கருடபுராணம் உள்ளிட்ட ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது.
- கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றை சோதனை
- ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இயங்குகிறது.
வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், நகர்புற மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஏற்படுபவர்கள் என தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மருத்துவமனையின் கோப்புகள், நோயாளிக்களுக்கான தனி பிரிவுகள் உள்ளதா, கழிப்பறை வசதி, சிகிச்சை முறை, தண்ணீர் வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உள்நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தவர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் செவிலியர்களிடம் பணிபுரியும் நேரம், பணி சுமை குறித்த ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், சுகாதார இணை இயக்குனர் டாக்டர். விஜயா முரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி, மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.
- போலீசார் சோதனை சிக்கினர்
- ஜெயிலில் அடைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த புது கேசவரம் சோதனைச் சாவடியில் அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்களை
சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தக்கோலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 19), சஞ்சீவி (37) என்பதும் அவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து 4 பைக்குகளை போலீசார்
பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
கலவை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 29-ந் தேதி அவரது வீட்டின் மாடியில் இருந்து படி வழியாக இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் உமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுவதாக புகார்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகராட்சி சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் நகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கழிப்பிடங்களை இடித்து அப்புறபடுத்திவிட்டு புதியதாக கழிப்பிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசியதாவது:-
வார்டுகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு வாலாஜா நகராட்சிகுட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு மருந்து புகை அடிக்க வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும். நகராட்சி மார்கெட் பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அப்பள்ளியின் வெளியே கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் இதனால் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தூர்வார வேண்டும்.
மழைக்காலத்திற்குள் நிலுவையில் உள்ள சாலைகளை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலாஜா நகரத்தில் சாலைகளிலும், தெருக்களிலும் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை பேசியதாவது:-
மோட்டார் சரி செய்யப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது. கொசு புகை மருந்து அடிக்கும் மெஷின் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்படும். நகராட்சி பகுதியில் 5 சாலை பணிகள் தான் நிலுவையில் உள்ளது.
இதனையும் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தார்.
- வார்டு உறுப்பினர்கள் குறைகளை தெரிவித்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நகர மன்ற தலைவர் முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில், துணைத் தலைவர் குல்சர் அகமது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)சந்தானம், பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
- 26 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் காவனூரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி னார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் காவனூர், புங்கனூர், பட்டினம், வரகூர், குப்பம், வெங்கடாபுரம் இன் னும் பல கிராம மக்கள் பயன் பெறுவார்கள்.
வெங்கடாபுரம் போன்ற மலைப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைபெற வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளாப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டி உள்ளது.
தற்போது இந்த மருத்துவ மனை தொடங்கப்பட்டால் அவசரகால சிகிச்சைகள், பிரசவங்கள், விஷ பூச்சி, விஷ பாம்பு கடிகள் போன்ற அவசர சிகிச்சைகளை இப்பகுதி மக்களால் விரைவில் பெற முடியும்.
பொதுமக்களின் அடிப் படை வசதிகளை நிறை வேற்றி தருவதில் முதல்- அமைச்சர் மிகவும் முக்கியத் துவம் அளிக்கிறார். பெண்கள் சுலபமாக தொழில் தொடங்கிடவும், தன்னிறைவு பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்திடவும் அதிகளவில் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தனியார் இடத்தினை விலைக்கு வாங்க நன்கொடை வழங்கிய 26 பேருக்கு அமைச்சர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
இப்பணிக்காக முதன் முதலில் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு ரூ.1 லட்சம் வழங்கினார். அதன் பிறகு ஆற்காடு எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர்.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜெ.எல்.ஈஸ்வரப் பன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தன்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் கிரிஜா, பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொ றியாளர் திரிபுர சுந்தரி, வட் டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித்குமார், ஆர் சேட்டு, பி. வடமலை, எஸ் ஆறுமுகம், பி.பொன்னரசன் பி.மகேந்திரன், கே.ஆர்.சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பதிவேடுகள் சோதனை செய்யப்பட்டது
- குறைகளை கேட்டறிந்தார்
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் வழக்குகள், பதிவேடுகள், போலீஸ் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, உஷா, சூரியா, சங்கர், உட்பட பலர் உடன் இருந்தனர்.
- ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் நடந்தது
- பெண் கவுன்சிலர் வாயில் பிளாஸ்டிக் ஒட்டிக்கொண்டு எதிர்ப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் தலைவர் சுஜா தாவினோத் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார். நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் குடும்ப தலை விகளுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட் டத்தினை செயல்படுத்தியுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராணிப் பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையத் திற்கு தேவையான நூல்கள் கொள்முதல் செய்ய விலை நிர்ணயக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பதிப்பகத்தாரர்கள், வெளியீட்டாளர்கள் மூலம் புத்தகங்கள் வினியோகம் செய்ய ரூ.10 லட்சம் செலுத்துவது, நகராட்சிக்கு சொந்தமான 16 கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாததால் வருவாய் ஆய்வாளர் மூலம் சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்து பொது ஏலம் விடவும், கடை வாடகை செலுத்தாதவர்கள் மீது கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
26-வது வார்டு அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன், தனது வார்டில் நீண்ட நாட்களாக வைக்கப்படும் கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லை என கூறி தனது வாயில் துணியை வைத்து, அதன்மீது பிளாஸ் டிக்கால் ஒட்டிக் கொண்டு கூட்டத்தில் பங்கேற்று நூதன முறையில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அப்போது எங்கள் வார்டில் மின்விளக்கு எரிவதில்லை, நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள 30 வார்டுகளிலும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்துத் தரப்படும் எனவும் மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
- மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேறுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு துணை தலைவர் தீனதயாளன், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்றத் துணை அம்சா மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், பூஞ்செழியன், தேவநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதர செவிலியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போலீசார் சோதனையில் சிக்கினார்
- 520 பாட்டில்களை பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
ஒச்சேரி அருகே மாமண்டூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக அவளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த, கடையின் உரிமையாளரான மாமண்டூரை சேர்ந்த குட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.67 ஆயிரம் மதிப்பிலான 520 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வினாடிக்கு 1350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
- நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வாலாஜா அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு தடுப்ப ணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் பாலாறு அணைக்கட்டில் நீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல்காட்சி அளிக்கிறது.
நீர் வரத்து அதிக ரித்துள்ளதை தொடர்ந்து பாலாறு அணைக்கட்டு தடுப்பணையிலிருந்து பாசன கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன்படி காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 280 கன அடி, மகேந்திரவாடி ஏரிக்கு 268 கன அடி, சக்கரமல்லூர் ஏரிக்கு 110 கன அடி, தூசி ஏரிக்கு 692 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.






