என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSP study"

    • போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
    • அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், நிலுவை வழக்குகள் விபரம், வழக்கு பதிவேடு, விபத்து உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்தார்.

    மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ. சுதாகரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • பதிவேடுகள் சோதனை செய்யப்பட்டது
    • குறைகளை கேட்டறிந்தார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் வழக்குகள், பதிவேடுகள், போலீஸ் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, உஷா, சூரியா, சங்கர், உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×