search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடி படியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    மாடி படியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    • மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 29-ந் தேதி அவரது வீட்டின் மாடியில் இருந்து படி வழியாக இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் உமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×