என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் தாலுகா பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பெங்க ளூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை பணிக்கு தேவைப் படும் கற்களை உருவாக்கும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தன்று இரவு தள்ளு வண்டியில் பிஜேந்திரசிங்சர்தார் (வயது 33) உள்பட 3 பேர் கல்லை ஏற்றிக்கொண்டு வண்டியை தள்ளி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிஜேந்திரசிங் தடுமாறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சக தொழிலாளர்கள் வேன் மூலம் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

    விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் ஹால் தெரு பகுதியில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரது வீடு உள்ளது.

    இவர் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை அரக்கோணத்தில் உள்ள வீட்டில் மர்ம கும்பல் புகுந்துள்ளது.

    அப்போது வீட்டின் கதவை மர்ம கும்பல் உடைக்க முயன்றனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வீட்டில் எவ்வித பொருட் களும் திருடு போக வில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும், ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி விழா அறக்கட்டளை உடன் இணைந்து ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திரா நர்சரி பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு ஏ.பி.ஜே அறக்கட்டளை சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட வணிக சங்க பேரமைப்பு தலைவர் சரவணன், ரோட்டரி மாவட்ட தலைவர் பரத்குமார், வணிகர் சங்க நகர செயலாளர் பாஸ்கரன், பள்ளி தாளாளர் சேட்டு, தொழிலதிபர் தர்மிச்சந்த் மற்றும் ஆசிரியர் இங்கர்சல் அறக்கட்டளை தலைவர் கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • வடமாநிலத்தை சேர்ந்தவர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த நக ரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர் வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    பயிற்சிக் குப்பின் அவர்கள் விமான நிலையம், துறைமுகம், அணு உலைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்.

    இந்தநிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தினேஷ் சிங் என்பவ ரது மகள் சோனம் சிங் (வயது 23) என்பவர் பயிற்சி பெற்று வருகிறார்.

    அவரது சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத் திற்கு அனுப்பி சரிபார்த்தபோது சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது.

    இது குறித்து மத்திய தொழிற் பாது காப்பு படை இன்ஸ்பெக்டர் சிவபத்மா தக்கோலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது
    • தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி தூய்மை சேவைபணியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை சேவைபணிக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்பு பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம், அனைத்து வீதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நாட்டுநல பணிதிட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    தூய்மை பணி குறித்து ஓவியப்போட்டி பனப்பாக்கம் அரசு மாதிரி பள்ளியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சீனிவாசன், கோகிலா, ராஜேஸ்வரி, சஞ்சீவி, சகிலா விநாயகமூர்த்தி, சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா, சுகாதார மேற்பார்வை யாளர் பிரவீன்குமார், உதவி தலைமை ஆசிரியர் செந்திக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்
    • ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக எஸ்.எம். சுகுமார் நியமிக்க ப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து அவர் மாவட்டத்திற்குட்பட்ட நகர, ஒன்றிய, பேரூராட்சி களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதைத் தொடர்ந்து நேற்று வாலாஜாவில் நகரம் மற்றும் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் டபிள்யு.ஜி மோகன், ஒன்றிய செயலாளர் வி.கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாலாஜா நகராட்சி அருகில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா படத்திற்கும் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கட்சியி னருடன் ஊர்வலமாக சென்று, வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா சிலைகளுக்கும், அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசினார்.

    பின்னர் அம்மூரில் பேரூராட்சி செயலாளர் தினகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு, எம்.ஜி.ஆர் சிலை, ஜெயலலிதா படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை உள்பட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள்,பிற அணிகளின் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. வன்னியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் பஸ்நிலையத்தில் நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்திற்கு வாலாஜா நகர பா.ம.க.செயலாளர் எல்.ஞானசேகர் தலைமை தாங்கி பேசினார்.

    வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவி, வாலாஜா நகர தலைவர் நரேஷ் உள்பட பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தின் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் ரஜினி சக்கரவர்த்தி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில செயலாளர் தி.க.ராஜா, பா.ம.க. மாவட்ட செயலாளர் ப.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட பொருளாளர் ஞானசவுந்தரி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மணிவண்ணன், மாவட்ட தலைவர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் பா.ம.க மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வாலாஜா வடகிழக்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி நன்றிகூறினார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில், இந்து மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வேலூர் கோட்ட தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார்.

    மாநில துணை செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில் மாநில செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இக்கூட்டத்தில் வாலாஜா ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பயன்பாட்டில் உள்ள நிலத்தை மீட்டெடுத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன. இதனையடுத்து பொது மக்களுக்கு பகவத்கீதை, கருடபுராணம் உள்ளிட்ட ஆன்மீக நூல்கள் வழங்கப்பட்டது.

    • கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி போன்றவற்றை சோதனை
    • ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுடன் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இயங்குகிறது.

    வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், நகர்புற மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஏற்படுபவர்கள் என தினந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணைய சிறப்பு கண்காணிப்பாளர் பால்கிஷன் கோயல் வாலாஜா அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் மருத்துவமனையின் கோப்புகள், நோயாளிக்களுக்கான தனி பிரிவுகள் உள்ளதா, கழிப்பறை வசதி, சிகிச்சை முறை, தண்ணீர் வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உள்நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தவர்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் செவிலியர்களிடம் பணிபுரியும் நேரம், பணி சுமை குறித்த ஏதேனும் புகார்கள் உள்ளதா என கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், சுகாதார இணை இயக்குனர் டாக்டர். விஜயா முரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி, மற்றும் செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • போலீசார் சோதனை சிக்கினர்
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த புது கேசவரம் சோதனைச் சாவடியில் அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்களை

    சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தக்கோலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 19), சஞ்சீவி (37) என்பதும் அவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்களிடமிருந்து 4 பைக்குகளை போலீசார்

    பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மதுபோதையில் தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் (வயது 45) கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 29-ந் தேதி அவரது வீட்டின் மாடியில் இருந்து படி வழியாக இறங்கினார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் உமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுவதாக புகார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகராட்சி சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் நகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கழிப்பிடங்களை இடித்து அப்புறபடுத்திவிட்டு புதியதாக கழிப்பிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசியதாவது:-

    வார்டுகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு வாலாஜா நகராட்சிகுட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு மருந்து புகை அடிக்க வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும். நகராட்சி மார்கெட் பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அப்பள்ளியின் வெளியே கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் இதனால் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தூர்வார வேண்டும்.

    மழைக்காலத்திற்குள் நிலுவையில் உள்ள சாலைகளை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலாஜா நகரத்தில் சாலைகளிலும், தெருக்களிலும் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை பேசியதாவது:-

    மோட்டார் சரி செய்யப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது. கொசு புகை மருந்து அடிக்கும் மெஷின் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்படும். நகராட்சி பகுதியில் 5 சாலை பணிகள் தான் நிலுவையில் உள்ளது.

    இதனையும் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தார்.

    ×