search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணி
    X

    பனப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணி

    • சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது
    • தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி தூய்மை சேவைபணியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை சேவைபணிக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்பு பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம், அனைத்து வீதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நாட்டுநல பணிதிட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    தூய்மை பணி குறித்து ஓவியப்போட்டி பனப்பாக்கம் அரசு மாதிரி பள்ளியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சீனிவாசன், கோகிலா, ராஜேஸ்வரி, சஞ்சீவி, சகிலா விநாயகமூர்த்தி, சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா, சுகாதார மேற்பார்வை யாளர் பிரவீன்குமார், உதவி தலைமை ஆசிரியர் செந்திக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×