என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 9-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்டத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப் புகளை கொண்டு நடத்தப்படுகிறது.

    முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியா ளர்கள் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை அணு கலாம்.ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித் துள்ளார்.

    • நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து நடந்தது
    • வருடம் முழுவதும் தேங்கி நிற்பதாக புகார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாத ரெயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய நடை மேடைகளிலிருந்து வரும் கழிவுநீர் மட்டுமின்றி மழை காலங்களில் வரும் மழை நீரும் சேர்ந்து வருடம் முழுவதும் தேங்கி நிற்பதை கண்டித்து கோஷமிட்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசு வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போட்டியை மாவட்ட கலெக்டர் வளர்மதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி 17 வயது முதல் 25 வயதிற்கு ட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 10கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ என 4 பிரிவுகளில் தனித்தனியே நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் அரசினர் மேல்நிலை ப்பள்ளியிலேயே முடிவும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம், நான்காம் இடம் முதல் 10-ம் இடம் வரை பரிசுத் தொகை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்ப ட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகர், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு , போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்பட விளையாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் ஓட்டபோட்டி யில் வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    சுமார் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

    • கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை
    • ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும்

    அரக்கோணம்:-

    அரக்கோணத்தில் 1865-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ரெயில்வேயால் கட்டப்பட்ட சுரங்கப்பாதை உள்ளது.

    இது தற்போது வரை வலிமையாக உள்ளது. இந்த பாதையில் கார்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் பைக்குகள் போன்றவை மட்டுமே செல்ல முடியும்.

    மேலும் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைப்பதாக உள்ளதால் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

    தற்போது இந்த மழைநீர் வடிகால் உள்ளிட்ட சுரங்கப்பாதையில், பொதுமக்கள், வியாபாரிகள், குப்பைகளை கொட்டுவதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    நீர் தேங்குவதை தடுக்க சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே அதிகாரிகளின் குழு ஆய்வு நடத்தியது.

    அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு சீரமைப்பு பணி தொடங்கும் என தெரிவித்தனர்.

    பணியின் ஒரு பகுதியாக, குறுகிய மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன. மேலும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வாய்க்கால்களும் சுத்தம் செய்யப்படும். சுரங்கப்பாதையில் உள்ள 700 மீட்டர் வடிகால் நீர்ப்பாசனத் தொட்டியுடன் இணைக்கப்படுகிறது.

    சுரங்கப்பாதை மற்றும் தொட்டிக்கு இடையே உள்ள முழு வடிகால் பாதையும் அதன் பாதையில் உள்ள புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகிறது.

    வரும் வாரத்தில் பணிகள் நிறைவடையும்.மேலும் ரெயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு கருதி சுரங்கப்பாதையில் இருக்கும் வடிகால் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள முடியாது. மேலும் சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றனர்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    பாசன தொட்டியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் , சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது சவாலாக உள்ளது. இந்த தொட்டியை தூர்வாரினால், மழைக்காலங்களில் அதிக மழைநீரை சேமித்து, ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றனர்.

    • ஆலோசனை‌ கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
    • திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

    ராணிப்பேட்டை:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிலவரங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவ லர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

    முதல்வரின் முகவரி திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

    மேலும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடி தீர்வும், பதில் மனுக்களுக்கு நேர்மையான பதில்கள் இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த மனுக்கள் மீது தலைமையிடத்திலிருந்து நேரடியாக மனுதாரரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே இதில் அனைத்து துறை அலுவலர்களும் சரியான தீர்வு மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது பரவி வரும் காய்ச்சல் பாதிப்பினை கட்டுப்படுத்த அனைத்து தனியார் மருத்துவ மனைகளிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளி களின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும்.

    மழை பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு குறித்த தகவல்களை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் வருகின்றது. தனியார் மருத்துவமனைகள் கட்டாயம் இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதி திட்டப்பணிகள் நிலுவையில் இருப்பதை உடனடியாக முடிக்க வேண்டும்.

    மேலும் சிறப்பு செயலாக்க திட்டங்கள், காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
    • பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்

    காவேரிப்பாக்கம்:-

    ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கிருந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கோப்புகளை சரிவர பராமரிக்க வேண்டும் பொதுமக்களிடம் வரும் புகார்களை விரைவாக முடிக்க வேண்டும் எந்தவித புகார்களை நிலுவையில் வைக்கக்கூடாது போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.

    பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், போலீஸ் நிலையத்தையும் மற்றும் வளாகத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஏ.டி.எஸ்.பி விஸ்வேஸ்வரய்யா, அரக்கோணம் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருள்மொழி, எஸ்.எஸ்.ஐ பிச்சாண்டி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

    • ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி அபிஷேகம்
    • 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    அரக்கோணம்:-

    அரக்கோணத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளையொட்டி சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணியர் மற்றும் வள்ளலாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் திருப்புகழ் திருவருட்பா சபை சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அடிப்படை வசதிகள் இல்லை
    • நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

    அரக்கோணம்:-

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும் காலணி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அசத்து வருகின்றனர்.அவர்கள் வசிக்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறைக்கு சொந்தமான பகுதியில் இடம் தந்து பட்டா வழங்க வேண்டும் எனகூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    மக்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கலைந்து சென்றனர்.

    • மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டு
    • பனப்பாக்கம் அரசு பள்ளியில் நடந்தது

    காவேரிப்பாக்கம்:-

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா  நடைபெற்றது.

    விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் கலந்துகொண்டு முகாமில் சேவை செய்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் மயூரநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரேகா, முன்னாள் தலைமை ஆசிரியை இளவரசி, நெமிலி முதல்நிலை காவலர் தனசேகர், உதவி தலைமை ஆசிரியர்

    செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 6 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    நெமிலியை அடுத்த கீழ்வெங் கடாபுரம் கிராமத்தில் செல் லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மாம பர்கள் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாகவருவாய் மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    அப்போது மாட்டுவண்டி களில் மணல் திருட்டில் ஈடு பட்டவர்கள் போலீசார் வரு வதை கண்டவுடன் அங்கி ருந்து தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.

    பின்னர் 6 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்தபோலீ சார் அது தொடர்பாக கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை (வயது 58), கார்த்திக் (30), சரவணன் (22), சதானந்தன் (40), முனுசாமி (58), வேலாயுதம் (54) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

    6 பேர் கைது

    போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    நெமிலியை அடுத்த கீழ்வெங் கடாபுரம் கிராமத்தில் செல் லும் கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மாம பர்கள் மாட்டு வண்டியில் மணல் திருடுவதாகவருவாய் மற்றும் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து நெமிலி தாசில்தார் பாலசந்தர், சப்- இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    அப்போது மாட்டுவண்டி களில் மணல் திருட்டில் ஈடு பட்டவர்கள் போலீசார் வரு வதை கண்டவுடன் அங்கி ருந்து தப்பியோட முயன்ற னர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர்.

    பின்னர் 6 மாட்டு வண்டி களை பறிமுதல் செய்தபோலீ சார் அது தொடர்பாக கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சார்ந்த ஏழுமலை (வயது 58), கார்த்திக் (30), சரவணன் (22), சதானந்தன் (40), முனுசாமி (58), வேலாயுதம் (54) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    • ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கோ. வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நிர்வாக குழு செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் நிர்வாக குழு துணைத் தலைவர் பி.என்.பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சாந்தி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

    இதில் ஆற்காடு நகர தி.மு.க. நகர செயலாளர் ஏ.வி சரவணன், நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் கோபு, சிவா, நகரத் துணைச் செயலாளர்கள் சொக்கலிங்கம், ருக்மணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    ×