என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம்"

    • ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி அபிஷேகம்
    • 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    அரக்கோணம்:-

    அரக்கோணத்தில் உள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சாமி கோவிலில் ராமலிங்க அடிகளாரின் 200-வது பிறந்த நாளையொட்டி சன்மார்க்க கொடியேற்றப்பட்டது. பின்னர் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணியர் மற்றும் வள்ளலாருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் திருப்புகழ் திருவருட்பா சபை சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×