என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • ரோந்து பணியின் போது சிக்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அருகேயுள்ள நெல்லிக்குப்பம், சயனபுரம், ஆட்டுப்பாக்கம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆட்டுப்பாக்கம் பத்ரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் செல்லும்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வீட்டின் பின்புறம் மறைவான பகுதியில் பிளாஸ்டிக் கவர்களில் மொத்தம் 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் இவர் நெமிலி அடுத்த சயனபுரம், பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பா.ம.க. சார்பில் நாளை நடக்கிறது
    • ரத்த தானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் பா.ம.க. சார்பில் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு நாளை 9-ந்தேதி முத்துக்கடை பஸ் நிலையம் அருகில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் இலவச கண் சிகிச்சை, ரத்ததானம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு பரிசோதனை, சிகிச்சைகள் பெறலாம் எனவும், ரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22) கூலி தொழிலாளி.

    இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நந்தகுமார் ரெட்டிவலம் கிராமத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் இரவில் பனப்பாக்கம் அருகே நெடும்புலி கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நந்தகுமார் மீது மோதியது.

    இதில் இவர் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர் மீது மோதி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் அருகே மேலபுலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 59)கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி (55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் வாங்க கணவரிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு அவர் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராணி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இந்த நிலையில் ராமாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ராணி பிணமாக மிதந்ததை கண்ட அப்பகுதியினர் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரிபார்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்
    • அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வருகினற 27-ந்தேதி அன்று வெளியிட உள்ளது.

    வருகிற 27-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர நவம்பர் மாதத்தில் 4, 5, 18, மற்றும் 19 ஆகிய 4 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    வருகிற ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்,

    ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி முனைப்புடன் செயல்பட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு நடந்தது
    • வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழாவையொட்டி கலவை ஆதிபராசக்தி வேளாாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், விநாடி-வினா மற்றும் சொற்பொழிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, மாவட்ட வன அலுவலர் கலாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட வனபாதுகாவலர் சுஜாதா, வனசகர்கள் சரவணபாபு, ராஜா, வெங்கடேசன், பசுமை தோழர் ஏஞ்சலின், ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி முதல்வர் தனுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வனத்துறை சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும் காடுகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி இருந்தது
    • ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இந்நிலையில் நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    இந்து சமய அறநிலை யத்துறை வேலூர் சரக ஆய்வர் சுரேஷ்குமார், குடியாத்தம் சரக ஆய்வர் பாரி ஆகியோர் முன்னிலையில் ஆம்பூர் நாகநாத சாமி கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி, கணக்காளர் பாபு மற்றும் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.6 லட்சத்து 86 ஆயிரம், 49 கிராம் தங்கம், 265 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    • 9-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்டத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப் புகளை கொண்டு நடத்தப்படுகிறது.

    முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியா ளர்கள் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை அணு கலாம்.ranipetdsto@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தெரிந்து கொள்ளலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித் துள்ளார்.

    • நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து நடந்தது
    • வருடம் முழுவதும் தேங்கி நிற்பதாக புகார்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாத ரெயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடிக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அரக்கோணம் ரெயில் நிலைய நடை மேடைகளிலிருந்து வரும் கழிவுநீர் மட்டுமின்றி மழை காலங்களில் வரும் மழை நீரும் சேர்ந்து வருடம் முழுவதும் தேங்கி நிற்பதை கண்டித்து கோஷமிட்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்தது
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பரிசு வழங்கினர்

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் போட்டியை மாவட்ட கலெக்டர் வளர்மதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டி 17 வயது முதல் 25 வயதிற்கு ட்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 8கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவிற்கு 10கி.மீ, பெண்கள் பிரிவிற்கு 5 கி.மீ என 4 பிரிவுகளில் தனித்தனியே நடைபெற்றது.

    ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் அரசினர் மேல்நிலை ப்பள்ளியிலேயே முடிவும் வகையில் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2ஆயிரம், நான்காம் இடம் முதல் 10-ம் இடம் வரை பரிசுத் தொகை தலா ரூ.1000 வீதம் என அனைத்து பிரிவிற்கும் வழங்கப்ப ட்டது.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகர், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு , போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி உள்பட விளையாட்டு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாரத்தான் ஓட்டபோட்டி யில் வெற்றி பெற்ற வர்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.

    சுமார் 100 பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினர்.

    • கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை
    • ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும்

    அரக்கோணம்:-

    அரக்கோணத்தில் 1865-ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் ரெயில்வேயால் கட்டப்பட்ட சுரங்கப்பாதை உள்ளது.

    இது தற்போது வரை வலிமையாக உள்ளது. இந்த பாதையில் கார்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் பைக்குகள் போன்றவை மட்டுமே செல்ல முடியும்.

    மேலும் நகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைப்பதாக உள்ளதால் குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

    தற்போது இந்த மழைநீர் வடிகால் உள்ளிட்ட சுரங்கப்பாதையில், பொதுமக்கள், வியாபாரிகள், குப்பைகளை கொட்டுவதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    நீர் தேங்குவதை தடுக்க சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே அதிகாரிகளின் குழு ஆய்வு நடத்தியது.

    அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு சீரமைப்பு பணி தொடங்கும் என தெரிவித்தனர்.

    பணியின் ஒரு பகுதியாக, குறுகிய மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன. மேலும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வாய்க்கால்களும் சுத்தம் செய்யப்படும். சுரங்கப்பாதையில் உள்ள 700 மீட்டர் வடிகால் நீர்ப்பாசனத் தொட்டியுடன் இணைக்கப்படுகிறது.

    சுரங்கப்பாதை மற்றும் தொட்டிக்கு இடையே உள்ள முழு வடிகால் பாதையும் அதன் பாதையில் உள்ள புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்படுகிறது.

    வரும் வாரத்தில் பணிகள் நிறைவடையும்.மேலும் ரெயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு கருதி சுரங்கப்பாதையில் இருக்கும் வடிகால் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள முடியாது. மேலும் சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைக்கப்படும் என்றனர்.

    இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    பாசன தொட்டியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் , சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பது சவாலாக உள்ளது. இந்த தொட்டியை தூர்வாரினால், மழைக்காலங்களில் அதிக மழைநீரை சேமித்து, ஊருக்குள் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க முடியும் என்றனர்.

    ×