search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி வாலிபர் சாவு
    X

    வாகனம் மோதி வாலிபர் சாவு

    • சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 22) கூலி தொழிலாளி.

    இவருக்கு திருமணம் முடிந்து 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் நந்தகுமார் ரெட்டிவலம் கிராமத்தில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் இரவில் பனப்பாக்கம் அருகே நெடும்புலி கிராமத்தில் உள்ள சுடுகாடு பகுதியில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நந்தகுமார் மீது மோதியது.

    இதில் இவர் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாலிபர் மீது மோதி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×