என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருங்கணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்"

    • கலெக்டர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒருங்கணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் (1 முதல் 30 வரை) மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழாவாக கொண்டா டப்பட்டது.

    அதிக அளவில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை (நகர்புறம்) ஆகிய 3 வட்டாரங்களைச் ேசர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கும், வட்டார அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அங்கன்வாடி பணியா ளர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வளர்மதி வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

    ×