search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் பெண் பிணமாக மீட்பு
    X

    கிணற்றில் பெண் பிணமாக மீட்பு

    • வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் அருகே மேலபுலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 59)கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி (55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் வாங்க கணவரிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு அவர் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராணி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இந்த நிலையில் ராமாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ராணி பிணமாக மிதந்ததை கண்ட அப்பகுதியினர் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×