என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வெற்றிச்செல்வன் ,அண்ணா பல்கலை கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ், சுரில், பிரபாகரன் ஆகியோர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் பங்கு, தோல்கழிவு மற்றும் திடக்கழிவு கையாள்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினர்.

    பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தூங்கிய போது இறந்து விட்டாரா?
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பஸ் நிலையம் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வந்தவர்கள் ஆண் பிணமாக கிடப்பது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் பெயர் கார்த்தி, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் முத்துக்கடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது.

    மது போதையில் இங்கு வந்து படுத்து தூங்கிய போது இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லட்சு மணன் (வயது 61). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளகரை வழியாக நடந்து சென்றார்.

    அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பா க்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு விரைந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் முதியவரை மீட்டனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லேரி கிராமத்தில் காமராஜபுரம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இன்று அதிகாலை சிப்காட் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. போலீசார் குடோன் அருகே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் மது போதையில் 9 மது பாட்டில்கள், இரும்பு ராடுடன் பைக்கின் அருகே நின்றிருந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    அவர் காட்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கரன் (வயது 29). என்பதும், கடையின் பூட்டை இரும்பு ராடால் உடைத்து மதுபாட்டில்கள் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் டாஸ்மாக் கடையின் மேலாளர் ரமேஷ் (48). கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அவதி
    • கால தாமதமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு கூத்தம்பாக்கம் ஊராட்சி உள்ளது.

    இந்தப் பகுதியைச் சேர்ந்த கூத்தம்பாக்கம் காலனி, நரிகுப்பம், வீரராகவபுரம்,அருந்ததி பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்து வதற்காக ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் கடந்த 2020-21-ல் ரூ.5.25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கும், மாற்றுத்திறனாளி மற்றும் ஆண்களுக்கும் சமுதாய சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது.

    பாணாவரத்தில் இருந்து கூத்தம்பாக்கம் செல்லும் சாலையையோட்டி

    அமைந்துள்ள இந்த சுகாதார கழிப்பறை கட்டிடத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு வசதியாக சாய்தளப் பாதையுடன், கைபிடி இருக்கைகளுடன் கூடிய சிறப்பு வடிவிலான கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    அரசு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக வெறும் காட்சிப் பொருளாகாவே சுகாதார வளாகத்தைக் காண்கிறோம்.

    இதனால் இப்பகுதி மக்கள் இயற்கை உபாதை களை கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக கழிப்பறை திறக்காததால் பெண்கள் தினமும் கடும் அவதிப்படுகின்றனர்.

    தயாராக இருக்கும் பொது கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு விடாததால் அரசு நிதிதான் வீணாக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் பயன்பாட்டிற்கு விடாமல் இருப்பதால் முட்புதர்கள் நிறைந்து காடு போல் காட்சியளிக்கிறது.

    மேலும் இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் பெண்களும், மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த பயன்பெறுவார்.

    எனவே, சீரான தண்ணீர் வசதியுடன் சுகாதார வளாகத்தைத் திறக்க அதிகாரிகள் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறினர்.

    • நாளை நடக்கிறது
    • கலெக்டர் அறிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் எதிர் கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு குறைதீர்க்கும் அமர்வு நாளை 12-ந்தேதி காலை ஆற்காடு - ஆரணி சாலையில், விலாரி கூட் ரோட்டில் உள்ள கே.பி.ஜே மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இந்த அமர்வில் கலந்து கொண்டு குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணலாம்.

    மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது
    • விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாபேட்டையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் உலக மனநல தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநல பிரிவு மற்றும் சமூக அமைப்புகள், நர்சிங் பயிற்சி கல்லூரிகள் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் விஜயமுரளி, மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷாநந்தினி, அலுவலக கண்காணிப்பாளர் சிவகுமார், மனநல மருத்துவர்கள் நர்மதா, கோகுலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மனநலத்தை பேணிகாப்பது போதை பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது குறித்து கல்லூரி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு நாடகம் மற்றும் பொம்மலாட்டம் நடைபெற்றது.

    இதில் டாக்டர்கள், மேல்விஷாரம் தி நேஷனல் வெல்பர் அசோசியேஷன் நிர்வாகிகள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தள்ளுபடி இலவசம் என ஏமாறாதீர்கள்
    • கலெக்டர் அறிவுரை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    நுகர்வோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தள்ளுபடி, இலவசம் என்று ஏமாறா தீர்கள். எந்த பொருள் வாங்கினாலும் ரசீது கேட்டு வாங்கவும், எந்த பொருளையும் அதன் தரத்தை பார்த்து வாங்க வேண்டும். மலிவு விலையில் கிடைக்கிறது என்று ஏமாந்து விடக்கூ டாது. பட்டுச்சேலைகள் வாங்கும் பொழுது சில்க் மார்க் முத்திரை பார்த்து வாங்க வேண்டும்.

    தங்க நகைகள் வாங்கும் போது ஹால்மார்க் முத்திரை இருக்கின்றதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் அக்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்களை வாங்குவது மிகச் சிறந்தது. அதேபோல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொரு ட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அன்றாடம் கடைகளுக்கு செல்லும் பொது கையில் துணி பைகளை எடுத்துச் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும்.நுகர்வோர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் மாவட்ட குறை தீர்வு அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவ லர்களை அணுகலாம்.

    ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை பெற்று விநியோகம் செய்ய அறிவுரை வழங்கப்ப ட்டுள்ளது. இது குறித்த புகார்கள் இருந்தால் மாவட்ட குறைதீர்வு அலுவலருக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து நட வடிக்கை மேற்கொள்ள ப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தேவிபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், மாவட்ட நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் குமரேசன் மற்றும் அலுவ லர்கள். நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் வளர்மதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • மாணவ - மாணவிகளுடன் இணைந்து குண்டு எறிதல் விளையாடினார்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது.

    போட்டியை கலெக்டர் வளர்மதி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாணவ - மாணவிகளுடன் இணைந்து குண்டு எறிதல் விளையாடினார்.

    இதில் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், வட்டாட்சியர் வசந்தி. ஜி.வி.சி மேல்நிலைப் பள்ளி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் பக்தவச்சலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில் குமார், தலைமையாசிரியை சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • டிசம்பர் 23-ந் தேதி திருச்சியில் ’ வெல்லும் சனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சீ.ம.ரமேஷ் கர்ணா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.

    அந்த மனுவில் வருகிற டிசம்பர் 23-ந் தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்' வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய அளவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மாநாட்டின் நோக்கம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வருகிற 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சமூக நல்லிணக்க பேரணிகள் நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் பேரணிக்கு அனுமதி அளித்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதில் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் தமிழ், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ், நிர்வாகிகள் சசிகுமார், ராஜா, பெல் சேகர், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
    • பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்புத்தூர் ஊராட்சியில் பி.எம்.ஏஜி.ஒய் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    மன்ற தலைவர் சரஸ்வதி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    இதைத் தொடர்ந்து சிறுணமல்லி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய துணைச்செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி அளித்தனர்
    • மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கூட்டமைப்பு சார்பிலும், சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் சார்பிலும் நேற்று கலெக்டர் வளர்மதியிடம் மனுக்களை அளித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

    இந்த நிறுவனங்களின் பொதுவான கோரிக்கையாக புதிய மின் கட்டணத்தை ரத்து செய்து, பழைய மின் கட்டணம் செயல்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    மின்நுகர்வோர்களுக்கு பீக் ஹவர் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    மேற்கூரை, சோலார் நெட்வொர்க் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு மல்டி டாரிப்பை உடனடியாக ரத்து செய்வதுடன், 2 ஆண்டுகளுக்கு மின்சார மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.

    பின்னர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீதான மின் கட்டண உயர்வை முற்றிலும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ராணிப்பேட்டை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்க மாவட்ட செயலாளர் முரளி தெரிவித்தார்.

    ×