என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • கண்துடைப்புக்கு நடத்துவதாக குற்றச்சாட்டு
    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் விவசாய குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் விவசாய குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் வினோத்குமார் பல்வேறு வேலை நிமித்தமாக கலந்து கொள்ளாததால், நேர்முக உதவியாளர் பழனிராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

    கூட்டம் நடைபெற்ற போது அலுவலக பணியாளர்கள் விவசாயிகளுக்கு தேனீர் கொண்டு வந்தனர். அப்போது திடீரென விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    உதவி கலெக்டர் வினோத்குமாருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தது. இதன் காரணமாக அவர் விடுமுறையில் இருந்தார். பின்னர் பணிக்கு வந்தும்

    தொடர்ந்து 4 மாதகாலமாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தை அவருக்கு இணையான அதிகாரிகள் அல்லது உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்த வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.

    குறைதீர்வு கூட்டத்தில் இதர துறை சார்ந்த அலுவலர்களும் முறையாக கலந்து கொள்வதில்லை, கூட்டத்தை முறையாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தரும் வகையில் நடத்தாமல் கண்துடைப்பு கூட்டமாக நடத்துவதை கண்டித்தும், குறித்த நேரத்தில் கூட்டம் நடத்துவதில்லை , மனுக்கள் மீதும் உரிய நடவடிகைகள் எடுப்பதில்லை எனவே கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினோம் என தெரிவித்தனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
    • போலீசார் விசாரணை

    கலவை:

    வேலூர் சேண்பாக்கம் பகு தியை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 40), வேலூரில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரிஸ்வானா. இவர்கள் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகு தியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தஸ்தகீருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்ற தஸ்தகீர் வெளியில் வரவில்லை. அவரது மனைவி சென்று பார்த்தபோது தஸ்த கீர் தூக்குப்போட்டுக்கொண் டது தெரியவந்தது. உடனடி யாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
    • கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் மூலம் பாதுகாப்பு நடைமுறைகள், விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துணை இயக்குனர் சாந்தி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
    • கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்

    ராணிப்பேட்டை:

    சோளிங்கர் அருகே உள்ள செங்கல் நத்தம் ஊராட்சி, ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 40 பேர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமாபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். இது சம்பந்தமாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட வீட்டை காலி செய்ய உத்தர விட்டனர். இருப்பினும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

    புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மேலும் கிராமத்திற்கு தேவையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அரசு உத்தரவு பெற்று பணி நடைபெறும் நிலையில் அதையும் தடுத்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் கிராமத்திற்கு செல்ல சாலை வசதி போதுமானதாக இல்லாததால் விவசாய நிலத்தில் பயிர் அறுவடை செய்யும் எந்திரங்களை எங்கள் ஊர் வழியாக வர முடியாமல் வேறு வழியாக விவசாய நிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளவர்களை காலி செய்து எங்கள் பகுதிக்கு சாலை மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தனர்.

    இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.

    • தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 35).

    இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து தனது பைக்கில் பனப்பாக்கம் சென்றார்.

    ஓச்சேரி-அரக்கோணம் ரோடு நங்கமங்கலம் கிராம் அருகே வரும்போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்
    • இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் இவரது மகன் கார்த்திக் (36).இவர் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்த பின்னர் தொழிற்சாலை செக்யூரிட்டி அறையில் அமர்ந்து தனது உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அங்கே மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்துபோன தொழிலாளி கார்த்திக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.

    ஆழமான இந்த கிணற்றில் தற்போது பெருமளவிற்கு நீர் நிரம்பி உள்ளது . இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் ஆண் பிணம் மிதப்பது குறித்து அப்பகுதி பொது மக்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர்.

    கிணற்றில் பிணமாக மிதந்த நபர் சுமார் 50. வயது மதிக்கத்தக்க நபர் ஆவார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இங்கு எப்படி வந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிணற்றில் பிணமாக மிதந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்து விட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வெற்றிச்செல்வன் ,அண்ணா பல்கலை கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ், சுரில், பிரபாகரன் ஆகியோர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் பங்கு, தோல்கழிவு மற்றும் திடக்கழிவு கையாள்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினர்.

    பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தூங்கிய போது இறந்து விட்டாரா?
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடையில் பஸ் நிலையம் அருகில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வந்தவர்கள் ஆண் பிணமாக கிடப்பது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அவர் பெயர் கார்த்தி, காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் முத்துக்கடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்தவர் என்பதும் தெரியவந்தது.

    மது போதையில் இங்கு வந்து படுத்து தூங்கிய போது இறந்து விட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்
    • வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லட்சு மணன் (வயது 61). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளகரை வழியாக நடந்து சென்றார்.

    அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பா க்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு விரைந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் முதியவரை மீட்டனர்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லேரி கிராமத்தில் காமராஜபுரம் சாலையில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இன்று அதிகாலை சிப்காட் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. போலீசார் குடோன் அருகே சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் மது போதையில் 9 மது பாட்டில்கள், இரும்பு ராடுடன் பைக்கின் அருகே நின்றிருந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

    அவர் காட்பாடி அடுத்த வெப்பாலை கிராமத்தை சேர்ந்த கரன் (வயது 29). என்பதும், கடையின் பூட்டை இரும்பு ராடால் உடைத்து மதுபாட்டில்கள் திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் டாஸ்மாக் கடையின் மேலாளர் ரமேஷ் (48). கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் அவதி
    • கால தாமதமின்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு கூத்தம்பாக்கம் ஊராட்சி உள்ளது.

    இந்தப் பகுதியைச் சேர்ந்த கூத்தம்பாக்கம் காலனி, நரிகுப்பம், வீரராகவபுரம்,அருந்ததி பாளையம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்து வதற்காக ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் கடந்த 2020-21-ல் ரூ.5.25 லட்சம் மதிப்பில் பெண்களுக்கும், மாற்றுத்திறனாளி மற்றும் ஆண்களுக்கும் சமுதாய சுகாதார கழிப்பறை கட்டப்பட்டது.

    பாணாவரத்தில் இருந்து கூத்தம்பாக்கம் செல்லும் சாலையையோட்டி

    அமைந்துள்ள இந்த சுகாதார கழிப்பறை கட்டிடத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு வசதியாக சாய்தளப் பாதையுடன், கைபிடி இருக்கைகளுடன் கூடிய சிறப்பு வடிவிலான கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    அரசு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாக வெறும் காட்சிப் பொருளாகாவே சுகாதார வளாகத்தைக் காண்கிறோம்.

    இதனால் இப்பகுதி மக்கள் இயற்கை உபாதை களை கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக கழிப்பறை திறக்காததால் பெண்கள் தினமும் கடும் அவதிப்படுகின்றனர்.

    தயாராக இருக்கும் பொது கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு விடாததால் அரசு நிதிதான் வீணாக்கப்படுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் பயன்பாட்டிற்கு விடாமல் இருப்பதால் முட்புதர்கள் நிறைந்து காடு போல் காட்சியளிக்கிறது.

    மேலும் இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் பெண்களும், மாற்றுத் திறனாளிகளும் மிகுந்த பயன்பெறுவார்.

    எனவே, சீரான தண்ணீர் வசதியுடன் சுகாதார வளாகத்தைத் திறக்க அதிகாரிகள் கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறினர்.

    ×