என் மலர்
ராணிப்பேட்டை
- கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
- 3.5 கிலோ போதைபொருள் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் பைக் ஓட்டிய சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து அரக்கோணம் டி.எஸ்.பி ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:-
அரக்கோணம் உட்கோட்டப் பகுதியில் வாகன விபத்துகளைக் குறைக்க சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் பைக் ஓட்டிய 18 வயதுக்கு குறைவான 9 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரக்கோணம் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பைக்குகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் ஓட்டி விபத்துகள் நடந்தால் பெற்றோர் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும். அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கஞ்சாவை விற்பனைக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து சிறப்பு வாகன தணிக்கையிலும், தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
- அமைச்சர் ஆர்.காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி,அங்கன்வாடி பணியாளர்கள் அமைத்திருந்த ஊட்டச்சத்து குறித்த உணவு கண்காட்சி அரங்கை பார்வையிட்டு, 200 கர்ப்பிணிகளுக்கு தனது சொந்த செலவில் சீர்வரிசை தட்டுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்,ஹரிணி தில்லை, முகமது அமீன், ஒன்றிய குழு தலைவர்கள் சேஷா வெங்கட், புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா,ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், நகரமன்ற உறுப்பினர்கள்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழக அரசு விளையாட்டுத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகம் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 40-வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். சர்வதேச போட்டிகளில் (வெற்றி பெற்றவர்கள், பங்கேற் றவர்கள்), தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற www. sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தகுதியான வீரர், வீராங்கனைகள் விண்ணப் பத்தினை பதிவிறக்கம் செய்து உரிய விவர இணைப்புகளுடன் வரும் 31-ம் தேதிக்குள், இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் அளிக்குமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
- 4 ஆயிரத்து 190 பேர் பங்கேற்றனர்
- ஊக்கத்தொகையாக மாதந் தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்
ராணிப்பேட்டை:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் தங்களின் தமிழ் மொழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், பிளஸ்-1 மாணவர்களுக்கான தமிழ் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் வாலாஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தேர்வு எழுத மொத்தம் 4 ஆயிரத்து 356 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடைபெற்ற தேர்வில் 4 ஆயிரத்து 190 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். 166 பேர் பங்கேற்வில்லை.
அரக்கோணம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) விஜயலட்சுமி ஆய்வு செய்தார். இத்தேர்வு முடிவில், மாநிலம் முழுவதும் 1,500 பேர் தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந் தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்.
இதில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
- 1½ கிலோ போதைபொருள் பறிமுதல்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, புளி யமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புளியமங்கலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 22). தமிழரசு (23) மற்றும் மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த அபூர்வராஜ் (21) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்க ளிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் வேடல் பகுதியை சேர்ந்த கருணாகரன்(28), தண்டலம் பகுதியை சேர்ந்த சேட்டு(21) என்பதும் அவர் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும் 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- 6 அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் முதலாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சந்தோஷ் காந்தி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் உதவி செயலாளர் டாக்டர்.ஆர்.என்.பாபா, பொருளாளர் டி.ஜெ.சீனிவாச ராஜ், வேலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜி.வி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினர்.
பின்னர் மேற்கண்ட அணிகளினிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 அணிகளுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் வேலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருப்புத்தூர் மாவட்டங்களின் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள், ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் பொருளாளர் ஜெயக்குமார், இணை செயலாளர்கள் பாஸ்கர், எபினேசனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பெல் கிரிக்கெட் கிளப் செயலாளர் நாராயண சாமி நன்றி கூறினார்.
- குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
காவேரிப்பாக்கம்:
பனப்பாக்கம் அருகே உள்ள துறையூர், உளியநல்லூர், சிறுவ ளையம், பொய்கைநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்கள் வேலை முடிந்து திரும்பும்போது கம்பெனி பஸ்சில் இருந்து இறங்கி நள்ளிரவு 12 மணியளவில் பனப்பாக்கத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு செல்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 2 தொழிலாளர்கள் பனப் பாக்கத்திலிருந்து துறையூர் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அவர்களிட மிருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று வழிப் பறிநடந்த துறையூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்ப டுத்தவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
- அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாட்டம்
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாள் ஆண்டு தோறும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற இளைஞர் எழுச்சி தின ஊர்வலம் நடைபெற்றது. ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் நவல்பூர், புதிய பஸ் நிலையம் வழியாக வந்து பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் அற்புதராஜ் இந்த ஊர்வலத்தை ஒருங்கிணைத்தார். இதில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை
- மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை செய்யப்பட்டது.
பெற்றோருக்கு அபராதம்
அப்போது 18 வயதிற்கு உட் பட்ட சிறுவர்கள் 4 பேர் பைக் ஓட்டியதாக வாகனங்களை கைப்பற்றி, சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வாகனத்தில் உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுபோன்று சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
- தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ஸ்போர்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 8-ம் ஆண்டு கனவு மாரத்தான் ஓட்டப்பந்தயம் இன்று காலை நடைபெற்றது.
மாரத்தான் போட்டிகளை தி.மு.க.வின் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் வினோத்காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூர பிரிவுகளில் பங்கேற்று ஓடினர்.
மாரத்தான் போட்டி யானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய முக்கிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி ஆளுநர் பரணிதரன், வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணை தலைவர் கமலராகவன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம், மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்கி நீதிபதிகள் உத்தரவு
- ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி நவீன் துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் வாலாஜா அடுத்த வள்ளுவம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 28), கட்டிட மேஸ்திரி.
கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி பஸ் மோதி உயிரிழந்தார.
இது தொடர்பாக சுபாஷின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்டில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதிகள் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 22 லட்சத்து 50 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டு அதற்கான ஆணையை சுபாஷின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து, அசல் மற்றும் வங்கி வழக்குகள் என மொத்தம் 77 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 கோடியே 30 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை பயனாளிகளுக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்- பரபரப்பு
- ஆற்காடு அருகே கட்டிட மேஸ்திரி குத்தி கொலை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியை அடுத்த டி.சி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45), கட்டிட மேஸ்திரி. அதேப்பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (32), ஆட்டோ டிரைவர்.
இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணனை, கிருபாகரன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இது குறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவர் கிருபாகரனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை டி.சி.குப்பத்தை அடுத்த நத்தம் மலை பகுதியில் உள்ள தனது நிலத்தில் கிருபாகரன் பதுங்கி இருந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கைதான கிருபாகரன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கிருஷ்ணனின் 2-வது மகள் திவ்யபாரதியும் (28), கிருபா என்கிற கிருபானந்தனும் (32) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணன், மகள் திவ்யபாரதியை மேல்குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துவைத்தார். திருமணமான பிறகும் திவ்யபாரதியும், கிருபாவும் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதியின் கணவர் கிருபாகரனை கண்டித்துள்ளார். மேலும் இதுகுறித்து தனது மாமனார் கிருஷ்ணனிடமும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணன் நேற்று முன்தினம் கிருபாகரனிடம் சென்று 'எனது மகளின் வாழ்க் கையை ஏன் கெடுக்கிறாய்' என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கிருபா, கிருஷ்ணனை ஆபாசமாக பேசி சரமாரியாக தாக்கினர். பின்னர் இரவு 7 மணியளவில் கிருபாகரன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துக் கொண்டு ஆவேசமாக வந்தார்.
தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார். வாலிபர் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மலையில் பதுங்கி இருந்தபோது கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






