search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் ஓட்டிய 9 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
    X

    பைக் ஓட்டிய 9 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு

    • கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது
    • 3.5 கிலோ போதைபொருள் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் பைக் ஓட்டிய சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து அரக்கோணம் டி.எஸ்.பி ஆர்.ரவிச்சந்திரன் கூறியதாவது:-

    அரக்கோணம் உட்கோட்டப் பகுதியில் வாகன விபத்துகளைக் குறைக்க சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதில் பைக் ஓட்டிய 18 வயதுக்கு குறைவான 9 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.அரக்கோணம் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பைக்குகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்கள் ஓட்டி விபத்துகள் நடந்தால் பெற்றோர் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க ப்படும். அரக்கோணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கஞ்சா விற்பனை செய்ததாக 5 பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கஞ்சாவை விற்பனைக்கு அனுப்பியவர்கள் குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க ப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து சிறப்பு வாகன தணிக்கையிலும், தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×