என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் மீதும் வழக்கு பதிவு"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 1½ கிலோ போதைபொருள் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, புளி யமங்கலம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புளியமங்கலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் அரக்கோணம் அசோக் நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 22). தமிழரசு (23) மற்றும் மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த அபூர்வராஜ் (21) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்க ளிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து அவர்களை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் வேடல் பகுதியை சேர்ந்த கருணாகரன்(28), தண்டலம் பகுதியை சேர்ந்த சேட்டு(21) என்பதும் அவர் வைத்திருந்த பையில் ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ×