என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் ஓட்டிய 4 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம்
    X

    பைக் ஓட்டிய 4 சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம்

    • ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை
    • மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை செய்யப்பட்டது.

    பெற்றோருக்கு அபராதம்

    அப்போது 18 வயதிற்கு உட் பட்ட சிறுவர்கள் 4 பேர் பைக் ஓட்டியதாக வாகனங்களை கைப்பற்றி, சிறுவர்களின் பெற்றோர் மற்றும் வாகனத்தில் உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்று சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×