என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி திடீர் சாவு"

    • பரமத்திவேலூரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார்.
    • முருகனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 22). இவரது பெற்றோர் இறந்து விட்டதால், முருகன் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில், முருகன் கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. நேற்று முன் தினம் வழக்கம் போல் பேக்கரியில் வேலை பார்த்து விட்டு, இரவு தான் தங்கி இருந்த ரூமில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருடன் தங்கியிருந்தவர்கள், முருகனை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முருகன் உயிரி ழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்
    • இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் இவரது மகன் கார்த்திக் (36).இவர் ராணிப்பேட்டை வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்த பின்னர் தொழிற்சாலை செக்யூரிட்டி அறையில் அமர்ந்து தனது உறவினருக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அங்கே மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்துபோன தொழிலாளி கார்த்திக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    ×