என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
    X

    அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

    • 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 4-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு பயிற்சி நிலைய முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ரியல் டேலண்ட் இன்ஜீனியரிங் லிமிடெட் நிர்வாக இயக்குனர் துரைசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தமாக 329 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

    இதில் பயிற்சி நிலைய மேலாண்மை குழு தலைவர் அரிதாஸ், ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவிதா, யூனியன் வங்கி கிளை மேலாளர் கிஷோர், பயிற்சி நிலைய நிர்வாக அலுவலர் சந்தியாஸ்ரீ, சாம்சங் இந்தியா ஆராய்ச்சி மேம்பாடு பொறியாளர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×