என் மலர்
நீங்கள் தேடியது "குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது"
- கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
கலவை:
வேலூர் சேண்பாக்கம் பகு தியை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 40), வேலூரில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரிஸ்வானா. இவர்கள் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகு தியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தஸ்தகீருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் தூங்க சென்ற தஸ்தகீர் வெளியில் வரவில்லை. அவரது மனைவி சென்று பார்த்தபோது தஸ்த கீர் தூக்குப்போட்டுக்கொண் டது தெரியவந்தது. உடனடி யாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






