என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்வேறு கோணங்களில் விசாரணை"

    • போலீசார் வழக்கு பதிவு
    • கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.

    நீர் நிரம்பி உள்ள இந்த கிணற்றில் நேற்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக வந்த தகவலை தொடர்ந்நு போலீசார் ஆண் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் பிணமாக மிதந்த நபர் செட்டித்தாங்கல் கிராமம் அண்ணா தெருவை சேர்ந்த சங்கர்(55) மெக்கானிக் என தெரியவந்தது.

    மேலும் இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் நேற்று பிணமாக மிதந்ததும் தெரியவந்தது. இவர் கிணற்றில் தவறி விழுந்ததில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×