குளத்தில் தவறி விழுந்து முதியவர் சாவு

தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
குளத்தில் தவறி விழுந்து முதியவர் சாவு
Published on

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அல்லி முத்து நாயக்கர் தெருவை சேர்ந்தவர் லட்சு மணன் (வயது 61). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள சோமநாதர் ஈஸ்வரன் கோவில் குளகரை வழியாக நடந்து சென்றார்.

அப்போது கால் தவறி குளத்தில் விழுந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் காவேரிப்பா க்கம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு விரைந்த காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் முதியவரை மீட்டனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com