என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெமிலி ஒன்றியத்தில் ரூ.24 லட்சத்தில் திட்ட பணிகள்
- ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்
- பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பருத்திப்புத்தூர் ஊராட்சியில் பி.எம்.ஏஜி.ஒய் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியை தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மன்ற தலைவர் சரஸ்வதி கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இதைத் தொடர்ந்து சிறுணமல்லி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ஒன்றிய துணைச்செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






