search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லோடு ஆட்டோ மோதி ஒருவர் பலி
    X

    லோடு ஆட்டோ மோதி ஒருவர் பலி

    • வேலைக்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் அருகே குப்புக்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாபு (வயது 40). இவர் ஆற்காட்டில் உள்ள ஜவுளிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பாபு தனது மொபட்டில் இன்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது மேல்வீராணம் அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த லோடு ஆட்டோ மோதியது.

    இதில் பாபு தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×