என் மலர்
நீங்கள் தேடியது "3 பிரிவுகளில் சொற்பொழிவு போட்டி"
- வருகிற 7-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வன உயிரின வார விழாவை ஒட்டி வனத்துறை சார்பில் வருகிற 7-ந்தேதி காலை 9 மணியள வில் கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்க ளுக்கான ஓவிய போட்டி, வினாடிவினா மற்றும் சொற்பொழிவு போட்டிகள் நடைபெறுகிறது.
ஓவியப் போட்டியானது வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பில் எல்.கே.ஜி முதல் 1-ம் வகுப்பு வரை , 2 முதல் 5- ம் வகுப்பு,6 முதல் 8-ம் வகுப்பு , 9 முதல் பிளஸ்-2 மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் தனி, தனி பிரிவாக நடக்கிறது.
அதேபோல் சுற்றுச்சூழல் காடு மற்றும் வனவிலங்கு என்ற தலைப்பில் வினாடி வினா போட்டியும், வனவிலங்கு பாதுகாப்பு என்ற தலைப்பிலும் 6 முதல் 9-ம் வகுப்பு,10 முதல் 12-ம் வகுப்பு, கல்லூரி மாண வர்கள் என 3 பிரிவுகளில் சொற்பொழிவு போட்டியும் நடைபெறுகிறது.
ஆர்வமுள்ள மாண வர்கள் இந்த போட்டி களில் கலந்து கொள்ளுமாறு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.






