என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாய் விஷம் குடித்து தற்கொலை
- மகன் இறந்த துக்கத்தில் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த கல்புதூர் கிராமம் முதல் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், இவரது மனைவி தாமரைசெல்வி(60).
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினரின் மகன் இறந்து விட்டார்.
இதனால் தாமரைசெல்வி மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ம் தேதி அன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த தாமரைசெல்வி சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தாமரைசெல்வி விஷ செடியை அறைத்து குடித்து இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாமரைசெல்வி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






