search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளவி கொட்டி விவசாயி சாவு
    X

    குளவி கொட்டி விவசாயி சாவு

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல குப்பம் கொள்ளை மேடுவை சேர்ந்தவர் கோபி (வயது 53). விவசாயி.

    கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷ குளவி கோபியை கொட்டி உள்ளது. வலியால் அலறி துடித்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ரத்தினகிரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×