என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
- மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பிரதாப் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் திட்டப் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை வழங்கினார். இந்த சிறப்பு மருத்துவ முகாமில், பொது மருத்துவம், இருதய சிகிச்சை பிரிவு, மகப்பேறுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றியக்குழு துணை தலைவர் தீனதயாளன், வட்டார மருத்துவ அலுவலர் ரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி மன்றத் துணை அம்சா மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர்கள் பெருமாள், பூஞ்செழியன், தேவநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், சுகாதர செவிலியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






