பைக் திருடிய 2 பேர் கைது

போலீசார் சோதனை சிக்கினர் ஜெயிலில் அடைத்தனர்
பைக் திருடிய 2 பேர் கைது
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் அடுத்த புது கேசவரம் சோதனைச் சாவடியில் அரக்கோணம் தாலுகா போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 நபர்களை

சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் தக்கோலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது 19), சஞ்சீவி (37) என்பதும் அவர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்து 4 பைக்குகளை போலீசார்

பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com