என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தர சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக் கன்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரியமல் லம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் விஷேச பூஜை மற்றும் அபி–ஷேகம், அலங்காரம் நடை–பெற்று வந்தது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். விழா–வின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இரவு முதல் காலை வரை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்து வந்தனர்.

    மேலும் 21 சட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் பால்கு–டம் போன்ற நேர்த்திக்கடன் களை செலுத்தினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு, கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து கரியமல்லம்மனை வழிபட்ட–னர்.

    நேற்று மாலை முளைப் பாரி ஊர்வலம் நடைபெற் றது. வாண வேடிக்கை, மேளதாளத்துடன் நடை–பெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். இதில் பக்தர்கள் உடல் முழுவதும் வைக்கோலை வைத்து, சாக்கு ஆடை அணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இவ்வாறு சாக்கு வேடம் அணிவதால் நினைத்த காரி–யத்தை கரியமல்லம்மன் நிறைவேற்றி தருவதாக தங்களது நம்பிக்கை என்று கூறினர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முளைப்பாரி அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட் டது.

    இந்த திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதியிலி–ருந்து 2000-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு கரியமல்லம்மனை வழிபட்ட–னர். விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து காதர்பாட்சா முத்துராமலி்ங்கம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.
    • தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்திற்கு வருகிற 17-தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு முதுகுளத்தூரில் உள்ள சர்வ விநாயக சாய் மகாலில் நடக்கிறது. பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு பரமக்குடி ஏபிஷா மகாலில் நடக்கிறது.

    திருவாடனை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மதியம் 2 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு மகாலில் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மாலை 4 மணியளவில், ராமநாதபுரம் பாரதிநகர் வைஸ்ராய் மகாலில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள். அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முகமது சதக் கல்லூரி மாணவரை இயக்குநர்-ஆசிரியர்கள் பாராட்டினர்.
    • தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

    கீழக்கரை

    அண்ணா பல்கலைக்கழக அளவில் கடல் சார் பொறியி யல் கல்லூரி மாணவர்க ளுக்கு இடையே நடைபெற்ற தேர்வில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சோன்ரபிரபு முதலாவதாக தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

    அண்ணா பல்கலை கழகம் அளவில் முதல் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் சோன்ர பிரபுவுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமிது இப்ராஹிம் மாணவரை பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

    மேலும் அவர் கூறுகை யில், அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் கல்லூரியில் கடல்சார் பொறியியல் துறையில் பயின்று சாதனை புரிந்து தற்போது பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு உதார ணமாக திகழ்கிறார். அவரை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    மாணவரின் தாயார் மாரியம்மாள், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி சி.இ.ஒ. விஜயகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், கல்லூரி கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சாதனை மாணவர் சோன்ரபிரபு கூறும்போது, நான் அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு உறு துணையாக இருந்த முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ.., கல்லூரி முதல்வர், துறை தலைவர், பேராசிரி யர்கள், என் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • முதல்-அமைச்சர் பங்கேற்கும் மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தி.மு.க. செயலாளர் அப்துல்ரகுமான் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    • 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 17, 18-ந் தேதிகளில் வருகை தர உள்ளார். 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடை பெறும் முகவர்கள் கூட்டத்திலும், 18-ந் தேதி மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டிலும் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இது தொடர்பான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டபம் பேரூ ராட்சி மகாலில் நடந்தது. அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பாருக் முன்னிலை வகித்தார்.

    பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் கூட்டத்தில் பேசியதா வது:-

    வருகிற 18-ந்தேதி முதல்-அமைச்சர் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு கள் செய்து வருகிறோம்.

    இது தவிர மண்டபம் பகுதியில் இருந்து மீனவர் சமுதாயத்தை சேர்ந்த 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் சகுபர், முகமது மீரா சாஹிப்,வாசிம் அக்ரம், அயலக அணி துணை அமைப்பாளர் காதர் ஜான் மற்றும் அனைத்து விசைப் படகு சங்க தலைவர்கள் சார்பில் விஜயரூபன்,ஜாகிர் உசேன், பாலசுப்பிர மணியன், செல்வகுமார், சர்புதீன், தி.மு.க. உறுப்பி னர்கள் ராஜகோபால், காந்தக்குமார், குலாம், அயூப்கான், பகுருதீன், வெள்ளைச்சாமி, நிசாந்த,வேதாளை கோவிந்தன், முனியசாமி, செய்யது சுல்தான், வார்டு செயலாளர் கஜினி, ஜியாவு தீன், முனியசாமி, முத்து இருளாண்டி, முன்னாள் நகர் பொருளாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்துக்கு முதல்-அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    ராமநாதபுரத்தில் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதேபோல் மண்டபம் கேம்ப்பில் வருகிற 18-ந் தேதி மீனவர் மாநாடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராம நாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வருகிற 18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மேடை அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ராஜ கண்ணப்பன் எம்.எல்.ஏ.க் கள் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ உத்தரவின் பேரில் மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் சிறப்பாக செய்து வருகிறார்.

    மேடை ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் இன்பாரகு, மாநில விவசாய அணி துணைச்செயலாள ரும், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான முருகவேல், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, வாசிம் அக்ரம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் பி.ஜி.சுகுமார், அயலக அணி துணை அமைப்பாளர் காதர்ஜான், தி.மு.க நிர்வாகிகள் ஆசாத், அயூப்கான், முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடியரசு தலைவருடன் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர்.
    • அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார்.

     ராமேசுவரம்

    பாண்டிச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரை முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது கலாம் கலாமின் 92-வது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட கலாமின் நினைவுகள் அழிவதில்லை என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவரிடம் வழங்கினர்.

    அப்துல்கலாம் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து குடியரசு தலைவர் நலம் விசாரித்தார். அப்போது கலாமின் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் தலைவரும், கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாப்தீன், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆங்கில மொழி பெயர்ப்பாளர்கள் ஸ்ரீமதி, ஸ்ரீபிரியா சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க இளம் தலைமுறையினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
    • புதிய பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அதனை தொடர்ந்து போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை முன்னி லையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்ற னர்.

    நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன், துணை போலீஸ் சூப்பி ரண்டு ராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது.
    • கமுதி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சதுரங்க போட்டி யுடன் தொடங்கியது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம், கமுதி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சதுரங்க போட்டி யுடன் தொடங்கி யது.

    இந்த போட்டியில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் ஆயிஷா பீவி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பாதுஷா முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் சர்மிளா வரவேற்று பேசி னார். கமுதி காவல் ஆய்வாளர் விமலா விளை யாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்தார்.நிர்வாக அலுவலர் முகமது இர்ஷாத், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகர், தாமரைக்கண்ணன் ஆகியோர் போட்டிகளுக் கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    முன்னதாக பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி காவல் ஆய்வாளர் விமலா நிலையில் எடுக்கப்பட்டது.

    • வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • யூனியன் மானேஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சன்முகப் பிரியா ராஜேஷ் தலைமை யில் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன் (கிராம ஊராட்சிகள்) ஆணையாளர் ஜானகி ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. யூனியன் மானே ஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:- லட்சுமி (தி.மு.க.):- கீழத்தூவல் கண்மாயை தூர்வார வேண்டும்.

    சசிகலா(அ.தி.மு.க.):- எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் சத்துணவு கூடம் இடிந்து கிடக்கிறது. புதிதாக சத்துணவுகூடம் கட்டித்தர வேண்டும். காமாட்சிபுரத்திலிருந்து சடையனேரி செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றித் தரவேண்டும்.

    அர்ச்சுனன் (வளநாடு, அ.தி.மு.க.):- மட்டியரேந்தல், தாழியரேந்தல் கிராமத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே மக்கள் போராட்டம் நடத்திய போது குடிநீர் வந்தன. அதன் பின்பு காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. மக்களுக்கு முறையாக குடிநீர் கிைடக்கிறதா? என பார்வையிட குடிநீர் வாரிய அதிகாரிகள் வருவதில்லை. மக்கள் கவுன்சிலரிடம் புகார் செய்கிறார்கள். நாங்கள் ஆைணயாளரிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. செலவை அங்கீக ரிக்கவே கூட்டம் நடத்து கிறீர்கள்.

    சண்முகப்பிரியா ராஜேஷ் (சேர்மன்):- ராமநாதபுரம் மாவட்ட வறட்சி நிவாரணத்திற்கு ஏக்கருக்கு ரூ.5400 அறிவித்த முதல்-அமைச்சருக்கும், வறட்சி நிவாரணம் வழங்க கோரி சட்டமன்றத்தில் குரல் கொடுத்த காதர் பாட்சா முத்துராமலிங்கத் திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • அங்கக வேளாண்மையில் ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கீழக்கரை

    விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறுவதற்காக செயற்கை உரங்களையும் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி–யதால் மண்ணின் இயற்கை வளம் குறைந்து மண்ணில் வாழும் நுண்ணு–யிர்களின் எண்ணிக்கை மற்றும் செயல் பாடு மிகவும் குறைந்தது. மண் வளத்தை பெருக்க பயிர்ச் சுழற்சி முறை ஒருங் கிணைந்த பண்ணைய முறை, பசுந்தாள் உரப்பயிர் களை பயிரிடுதல் பயிர் கழி–வுகள், இதர வேளாண் கழிவுகள், அங்கக உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், மண் புழு உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம் மற்றும் எண் ணெய் வித்துகளின் புண் ணாக்கு போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரி தெரி–வித்துள்ளார். வயல் வரப்புகள் தரிசு நிலங்கள் சாலையோரங்கள் மற்றும் காடுகள் வளரும் வாகை, புங்கம், வேம்பு, மயில் கொன்றை மரங்களின் இலைகள் மரத்தின் சிறு குச்சி கொம்புகள் ஆகிய பசுந்தளை உரங்களை நிலத்தில் இடுவதால் மண்ணின் இயற்பியல் குணங்கள் மேம்படும். உயிர் உரங்கள் மண்ணில் இடப்படும் அனைத்து இடுபொருட்களும் சிதை–வுற்று அங்கக மூலங்களாக மாற் றம் பெறுவதற்கு கோடிக்க–ணக்கான நுண்ணுயிரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றை மண்ணில் இடும் பொழுது மண்ணில் அதன் எண்ணிக்கையை அதிகப்ப–டுத்துவதோடு பயிர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக் களையும் மேம்படுத்தி பயிர்களுக்கு ஊட்டமளிக்கிறது.

    பயிர்களில் அதிக விளைச் சலைப் பெற மண் ணில் பெற மண்ணில் போதுமான அளவில் கிட் டும் நிலையில் உயிர்ச்சத்து–களை நிலை நிறுத்துவ–தற் கும் மண்ணின் இயற்பி–யல் குணங்களை மேம்படுத்து–வதற்கும் மண்வாழ் உயிரி–னங்களின் மகத்தான செயல்பாட்டிற்கும் அடிகோ–லும் அங்கக பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து வளங்குன்றா அங்கக வேளாண்முறையை பின்பற்றுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் முன் வரவேண்டும் என்று ராம–நாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி கேட்டுக்கொண் டுள்ளார்.

    • ராமநாதபுரத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • இதில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 17, 18-ந்தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பேசுகையில், முதல்-அமைச்சர் வருகிற 18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இதில் வருவாய்த்துறை, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மீன்வளத்துறை மற்றும் பிற துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தொடர்புடைய துறைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், வளர்ச்சி முகமை முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) அபிதா ஹனிப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து எம்.எல்.ஏ.-கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    • மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    ராமநாதபுரத்தில் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடை பெற உள்ளது.

    இதேபோல் மண்டபம் கேம்ப்பில்18-ந்தேதி மீனவர் மாநாடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு கிறது. இதில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராம நாதபுரம் மாவட்டத் திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அந்த இடத்தில் மேடை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ, காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் ஏற்பாடு களை மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் சிறப்பாக செய்து வருகிறார்.

    மேடை ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர்கள் காத்த வராயன், பிரபாவதி, வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா,வாசிம் அக்ரம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் பி.ஜி.சுகுமார், அயலக அணி துணை அமைப்பாளர் காதர் ஜான், தி.மு.க நிர்வாகி கள் ஆசாத், அயூப்கான், முனியசாமி, பொதுப் பணித் துறை உதவி செயற் பொறியாளர் செல்வராஜ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபி, ஜெயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×