என் மலர்
புதுக்கோட்டை
- புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சில நாட்களிலேயே மூடப்பட்டு உள்ளது
- பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால் மூடப்பட்டது
அறந்தாங்கி,
அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட நற்பவளக்குடி ஊராட்சியில் குன்னக்குரும்பி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்கடை இருக்கக் கூடாது என்று கூறிகடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல் துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களை அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- உலக அமைதி வேண்டி அறந்தாங்கியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- 570 ஜெஆர்சி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி,
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் 88 பள்ளிகளை சேர்ந்த 570 ஜெஆர்சி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) சண்முகம் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியானது அரசு பேருந்து நிலையம், அண்ணாசிலை, அரசு மருத்துவமனை வழியாக தனியார் பள்ளியை அடைந்தது. பேரணியின்போது போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது, அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் போன்ற உலக அமைதிக்கான வாசங்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000 மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர்சேக், அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- அன்னவாசல் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் விபத்தில் பலியானார்
- மதுரை மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு திரும்பியபோது பரிதாபம்
விராலிமலை,
மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த மாநாட்டு முன்னேற்பாடுபணிகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஒன்றிய குழு கவுன்சிலருமான சாம்பசிவம் (வயது 65). இவர் நேற்று காலை மதுரை புறப்பட்டு சென்றார்.பின்னர் நேற்று இரவு கந்தர்வகோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் காரில் ஊர் திரும்பினார். திருச்சி - புதுக்கோட்டை சாலையில் முத்துடையா ம்பட்டி கிராமத்தில் அவரது வீடு அமைந்துள்ளது.இதை யடுத்து சாம்பசிவம் முத்துடையா ம்பட்டியில் நேற்று இரவு 11 மணியளவில் காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.காரில் இருந்து இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்து விட்டது. உடனே காரை திருப்பி கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் அங்கு விரைந்து வந்தார்.பின்னர் தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாம்பசிவத்திற்கு மனைவி மற்றும் 4 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.இதில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- இருங்களன் விடுதியில் உள்ள அரசு பள்ளிக்கு கிராமப் பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது
- ரூ.௩ லட்சம் மதிப்பலான கல்வி சீர் எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் ஒப்படைக்கப்பட்டது
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சி இருங்களன் விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம பொதுமக்களால் சுமார் ரூ.3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கல்விச்சீராக வழங்கப்பட்டது. இந்தக் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சிவ திருமேனிநாதன் ஊராட்சி மன்ற தலைவர் கனகவல்லி அன்பழகன் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி மையத்தின் மேற்பார்வையாளர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரிய பெருமக்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியர் அப்பு தொகுத்து வழங்கினார்.
- மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:
மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க. மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும் ஒன்றிய குழு கவுன்சிலருமான சாம்பசிவம் (வயது 65). இவர் நேற்று காலை மதுரை புறப்பட்டு சென்றார்.
பின்னர் நேற்று இரவு கந்தர்வகோட்டை முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் காரில் ஊர் திரும்பினார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முத்துடையாம்பட்டி கிராமத்தில் அவரது வீடு அமைந்துள்ளது.
இதையடுத்து சாம்பசிவம் முத்துடையாம்பட்டியில் நேற்று இரவு 11 மணியளவில் காரில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாம்பசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
காரில் இருந்து இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் விபத்து நடந்து விட்டது. உடனே காரை திருப்பி கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் அங்கு விரைந்து வந்தார்.
பின்னர் தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாம்பசிவத்திற்கு மனைவி மற்றும் 4 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
இதில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட சென்ற அதிமுக ஒன்றிய செயலாளர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அக்கட்சியினரையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருமயம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது
- தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை,
திருமயம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் தலைவர் சிக்கந்தர் தலைமையில் செங்கா விடுதி கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் எம்பி சரவணன், துணைத் தலைவர் சையது ரிஸ்வான், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீரமணி, ரத்தினம், வீராச்சாமி, முத்துலட்சுமி, காந்திமதி, ஏகம்மை மற்றும் கால்நடை மருத்துவர் மோகனப்பிரியா, வருவாய்த்துறை துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் கிராம நிர்வாக அலுவலர் மீனாள், தலைமை ஆசிரியர், சுய உதவி குழுக்கள், தொலைக்காட்சி நிருபர்கள், பத்திரிக்கை நிருபர்கள், திருமயம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- திருமாவளவன் பேனர் அகற்றியதால் வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் பல்ேவறு இடங்களில் திருமாவளவனின் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மட்டங்கால் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த திருமாவளவன் பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் தூக்கி சென்று விட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை அக் கட்சியினர் பிளக்ஸ் பேனர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள கட்சியினருக்கு பரவியது.
உடனே அவர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் மட்டங்கால் பேருந்து நிறுத்தம் அருகே மாநில துணைத்தலைவர் வீர விடுதலை வேந்தன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் காரர்கள், திருமாவளவன் பிளக்ஸ் பேனர் திட்டமிட்டு அகற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படுவது வாடிக்கையாக நிகழ்கிறது என குற்றஞ் சாட்டினர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் ராஜ் பிளக்ஸ் பேனர் அகற்றியவர்கள் மீது உரிய நடவடிகை எடுகக்ப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் கந்தர்வகோட்டை பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கி மாணவிகளுக்கு மாத்திரைகளை கொடுத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுடைய மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. விடுபட்டுள்ள குழந்தைகளுக்கு வரும் 24-ந் தேதி வழங்கப்பட உள்ளது. 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும் (200 மி.கி.) மற்றும் 2 முதல் 19 வயது உள்ள குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), டாக்டர் நமச்சிவாயம் (அறந்தாங்கி), தலைமையாசிரியர் சுசரிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருவப்பூர், மேலத்தானியம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் ஏற்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக
புதுக்கோட்டை
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை சிப்காட், கே.வி.நகரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் ெபறும், சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு).
சார்லஸ்நகர், சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி, வடக்குராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடிரோடு, காந்திநகர், அய்யனார்புரம், முடுமுளுநகர், நிஜாம்காலனி, சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர், நு.ஏ.சு.நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர், சேங்கைதோப்பு, மருப்பிணிரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- இரு சக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் கந்தர்வகோட்டை அருகே புதுநகர் அருகில் உள்ள டோல்கேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 2 இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்முரணாக பேசினர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும், கடந்த 2 நாட்களாக கந்தர்வகோட்டை மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 ேபரையும் கைது செய்து, 2 மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது
- 210 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் மாவட்ட அமைச்சர் ஆணழகன் சங்கம் எஸ்.ஆர், குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஆணழகன் போட்டி புதுக்கோட்டை லேனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆணழகன் போட்டியை எஸ் ஆர் குழும நிறுவனங்கள் எஸ்.ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் தலைவர் ஜோனதன் ஜெயபாரதன் மற்றும் கௌரவ தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் செயலாளர் ஆர் கிருஷ்ணாமுனி பொருளாளர் பாஸ்கரன் முன்னிலைவகித்தனர் . இந்நிகழ்வில் எஸ் ஆர் பால சண்முகம், கல்வியாளர் தங்கம்மூர்த்தி மற்றும் பல்வேறு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள், லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள், கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார் , அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் கலந்து கொண்டு ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நிறைவாக நடைபெற்ற போட்டியில் சையத் மன்சூர் பாஷா, ஷேக் முகமத், ஆர் முத்துக்குமார், ரமேஷ் கண்ணா ,அருணாச்சலம், பாண்டியன் , ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாமக்கலைச் சேர்ந்த என் சரவணன் ரூபாய் 2 லட்சமும் எஸ்.ஆர். குழும நிறுவனங்களின் எஸ் ராமச்சந்திரன் வழங்கி மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தினை வழங்கி கௌரவித்தார். இரண்டாவதாக வந்த சென்னையைச் சேர்ந்த ஆன்ட்ரேஷன் ரூபாய் 1 லட்சமும் பெற்று சாதனை பெற்றார். மூன்றாவதாக வந்து சாதனை பெற்ற சென்னையைச் சேர்ந்த பாண்டியனுக்கு ரூபாய் 50,000 தொகையும் எஸ் .ஆர் குடும்பத்தின் எஸ் .ராமச்சந்திரன் வழங்கி பாராட்டினார். தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 210 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் பெண்களும் இப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர் . தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் எம் ராஜேந்திர குமார் பொதுச் செயலாளர் எம் அரசு, பொருளாளர் போஸ் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியினை காண மாவட்டங்களிலிருந்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் வருகை புரிந்தனர் .நிகழ்வை சட்ட ஆலோசகர் பி ஜவஹர் தொகுத்து வழங்கினார் .
- புதுக்கோட்டை அன்னவாசலில் நின்ற காரில் இருந்த ரூ.1.30 லட்சம் திருட்டு
- பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து துணிகர திருட்டு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கிடகுளம் தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது 30). என்ஜினீயர். இவர் அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை பார்க்க ஊரில் இருந்து காரில் மெய்வழிசாலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அன்னவாசல் பகுதியில் வந்த போது ராஜேஸ்குமார் தனது காரை அங்குள்ள ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு உணவு சாப்பிட சென்றுள்ளதாக கூறப்படுகிறது.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பக்க வாட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் காரின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது காருக்குள் இருந்த ரூ.1.30 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து அவர் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






