என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான ஆணழகன் போட்டி
    X

    மாநில அளவிலான ஆணழகன் போட்டி

    • புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது
    •  210 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் மாவட்ட அமைச்சர் ஆணழகன் சங்கம் எஸ்.ஆர், குழும நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான ஆணழகன் போட்டி புதுக்கோட்டை லேனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆணழகன் போட்டியை எஸ் ஆர் குழும நிறுவனங்கள் எஸ்.ராமச்சந்திரன் குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கத்தின் தலைவர் ஜோனதன் ஜெயபாரதன் மற்றும் கௌரவ தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் செயலாளர் ஆர் கிருஷ்ணாமுனி பொருளாளர் பாஸ்கரன் முன்னிலைவகித்தனர் . இந்நிகழ்வில் எஸ் ஆர் பால சண்முகம், கல்வியாளர் தங்கம்மூர்த்தி மற்றும் பல்வேறு ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள், லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள், கம்பன் கழகச் செயலாளர் சம்பத்குமார் , அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் கலந்து கொண்டு ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். நிறைவாக நடைபெற்ற போட்டியில் சையத் மன்சூர் பாஷா, ஷேக் முகமத், ஆர் முத்துக்குமார், ரமேஷ் கண்ணா ,அருணாச்சலம், பாண்டியன் , ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நாமக்கலைச் சேர்ந்த என் சரவணன் ரூபாய் 2 லட்சமும் எஸ்.ஆர். குழும நிறுவனங்களின் எஸ் ராமச்சந்திரன் வழங்கி மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தினை வழங்கி கௌரவித்தார். இரண்டாவதாக வந்த சென்னையைச் சேர்ந்த ஆன்ட்ரேஷன் ரூபாய் 1 லட்சமும் பெற்று சாதனை பெற்றார். மூன்றாவதாக வந்து சாதனை பெற்ற சென்னையைச் சேர்ந்த பாண்டியனுக்கு ரூபாய் 50,000 தொகையும் எஸ் .ஆர் குடும்பத்தின் எஸ் .ராமச்சந்திரன் வழங்கி பாராட்டினார். தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 210 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் பெண்களும் இப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர் . தமிழ்நாடு அமைச்சூர் ஆணழகன் சங்கத் தலைவர் எம் ராஜேந்திர குமார் பொதுச் செயலாளர் எம் அரசு, பொருளாளர் போஸ் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்க நிர்வாகிகள் கல்வியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியினை காண மாவட்டங்களிலிருந்து பல்வேறு விளையாட்டு வீரர்களும் வருகை புரிந்தனர் .நிகழ்வை சட்ட ஆலோசகர் பி ஜவஹர் தொகுத்து வழங்கினார் .

    Next Story
    ×