என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டைக்கு 10 எம்எல்டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க திட்டம்
- குடிநீர் வடிகால் வாரியத்திடம் புதுக்கோட்டை நகராட்சி கொடுத்த புகாரை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் முடிவு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில் நகர்முழுவதும் குடிதண்ணீர் வழங்க தக்க நடவடிக்கையை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் உட்பட ஆகியோர் எடுத்து வரும் நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்திடம் புதுக்கோட்டை நகராட்சி சார்பாக புகார் மனு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடுதல் முதன்மை பொறியாளர் லிங்கமூர் த்தி தலைமையில் திருச்சி முதன்மை பொறியாளர் மாதவன், புதுக்கோட்டை செயற் பொறியாளர் அயனன் உதவி செயற் பொறியாளர்கள் கருப்பையா மற்றும் ஜெயசந்திரன் ஆகியோர் குடி நீர் வடிகால் வாரியம் மூலமாக புதுக்கோட்டை நகராட்சிக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் குறித்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்க்கொண்டனர் . இதுகுறித்து புதுக்கோட்டை நர்மன்ற தலைவர் அரங்கில் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தாவது:- தற்போது புதுக்கோட்டை நகராட்சிக்கு குடிதண்ணீர் 1 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதை 10 எம்எல்டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றனர். மேலும் கோடை காலத்தை முன்னிட்டு உர்pய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தனர் . பேட்டியின் போது நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், குடிநீர் வடிகால் வாரிய கூடுதல் முதன்மை பொறியாளர், லிங்கமூர் த்தி, பொறியாளர் கள் மாதவன், அயனன், கருப்பையா, ஜெயசந்திரன், நகர்மன்ற துணைத்தலைவர், லியாகத்அலி, ஆணையர், நாகராஜன், பொறியாளர், சேகரன், நகர்மன்ற உறுப்பினர் ,பழனிவேல் உட்பட பலர் இருந்தனர்.
- கலைஞர் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்றது
- ஏராளமானவர்கள் பங்கேற்றனர்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மணமேல்குடி தாலுகா வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சித்த மருத்துவம், கண் பரிசோதனை, காசநோய், மதுமேகம் (சுகர்),இரத்த அழுத்தம், பல், காது, மூக்கு, தொண்டை ஆகியவ ற்றிற்கான நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.மேலும் மேல் சிகிச்சை தேவைப்படு வோருக்கு மாவட்ட தலைமை மருத்து வமனைக்கு சிபாரிசு செய்ய ப்பட்டது. அதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று க்கொண்டார். அதே போன்று கரகத்திக்கோ ட்டையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் கோரிக்கை களை கேட்டறிந்து அவர்க ளிடம் மனுகளைப் பெற்று க்கொண்டார்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வா கிகள், அரசு அலுவலர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அண்ணன் முறை என்பதால் காதலை முறித்துகொண்ட காதலி மீது ஆத்திரம்
- மயிலாடிகாடு கிராமத்தில் போலீஸ் குவிப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்குடி ஊராட்சி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் கருப்பையா மகன் துரைக்கண்ணு(வயது 36). பன்னீர்செல்வமும் கருப்பையாவும் உறவு முறையில் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் மகள் பவித்ரா(வயது 21). புதுக்கோட்டையில் உள்ள அரசு மன்னர் கல்லூரியில் பி.ஏ., இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிக்கும் துரைக்கண்ணுவும், பவித்ராவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.பின்னர் இந்த காதல் விவகாரம் பவித்ராவின் வீட்டிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை இல்லை என்று தெரிவித்து இவர்களது காதலுக்கு பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து ள்ளனர். துரைக்கண்ணு தனக்கு உறவு முறை சகோதரர் என்று தெரிந்து கொண்ட பவித்ரா, துரைக்கண்ணுவுடன் பழகுவதையும் பேசு வதையும் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் பவித்ரா அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். பவித்ரா வின் குடும்பத்தினர் கூலி வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து கொண்ட துரைக்கண்ணு, பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் துரைக்கண்ணு அவரது வீட்டிற்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மாலையில் வீடு திரும்பிய பவித்ராவின் தாயார் அஞ்சலை, பவித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு ஆலங்குடி போலீசாருக்கு தவல் அளித்துள்ளனர்.ஆலங்குடி போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து நடத்திய விசாரணையில், பவித்ரா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதும், துரைக்கண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போஸ்ட்மார்ட்டத்திற்காக அனுப்பி வைத்தனர்.மயிலாடி கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில், ஆலங்குடி (பொறுப்பு )போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷாராணி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பா ஸ்கரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அங்கு குவிக்கப்பட்டனர்.
- ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம்
- போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டியில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்குப்பட்டியில் புதிதாக ரேஷன் கடை கடந்த வாரம் தொடங்கப்பட்டது.இந்நிலையில் வடக்குப்பட்டி மற்றும் கல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ரேசன் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு சென்றனர்.அப்போது அங்கு உங்களது பெயர் இங்கு இல்லை எனவும் இதனால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாது என கடை ஊழியர் தெரிவித்த தாக கூறப்படுகிறது .இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் வடகாடு பெரிய கடை வீதி ஆலங்குடி ஆவணம் கைகாட்டி நெ டுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமா தான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உரிய அரசு அலுவலர்களிடம் பேசி ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
- காதலை ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு.
- பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் துரைக்கண்ணு (வயது 35) என்பவர் காதலித்துள்ளார். ஆனால் முறைதவறிய காதல் என்பவதால் அவரை திருமணம் செய்ய பவித்ரா விரும்பவில்லை. துரைக்கண்ணுவுக்கு பவித்ரா மகள் முறை வேண்டும். அத்துடன் துரைக்கண்ணுவைவிட பவித்ராவுக்கு 15 வயது குறைவு. தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு.
இந்நிலையில் இன்று பவித்ராவின் வீட்டுக்கு சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், வீட்டுக்கு சென்று தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்டது
- ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருப்பதை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி சுற்றுச்சுவர், கலையரங்கம், மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வ கோட்டை கோமாபுரம் தச்சங்குறிச்சி, காட்டு நாவல், அண்டனூர், அரியாணிப் பட்டி, மஞ்ச பேட்டை. நெப்புகை, புதுநகர் உள்ளிட்ட ஊராட்சி களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், பயணியர் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.கோட்டாட்சியர்செல்வி முன்னிலையில் கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆணையர்கள் திலகவதி, நளினி, நகரச் செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆரஞ்சு பாப்பா குணசேகரன், அன்பு, இளங்கோவன், முல்லை ஆறுமுகம், முருகேசன், மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாரதி பிரியா அய்யாதுரை, கலிய பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேளாண் இயக்குனர் விளக்கம்
- புதுகோட்டையில் கோடை காலத்தில் தென்னையை தாக்கும் வண்டு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 493 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னையில் காண்டா மிருக வண்டுகள் தாக்கு தல் ஜூன் முதல் செப்டம்பர்மாதம் வரை அதிகமாக இருக்கும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையூம் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.இதனை கட்டுப்படுத்து வது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இயக்குனர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம்தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும்.கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.ரைனோலியூ ர்இன க்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.வேப்பங்கொட்டை தூளுடன், மணலை 1 : 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.ஒரு மண்பானையில் 5 லிட்டர்நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட உதவும் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.
- சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
- காவல்துறையினர், பொது மக்கள் பாராட்டு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அமுதாராணி (55).விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர் தனது பேரக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, ஆயிங்குடி யிலிருந்து அறந்தாங்கி பேருந்தில் சென்றுள்ளார்.கட்டுமாவடி முக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்துள்ளார். அப்போது கட்டு கட்டாக பணம் கிடப்பதை அவர் கண்டுள்ளார். யாரும் இல்லாத நிலையில், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து, அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் கொடுத்துள்ளார். பணத்தை தவற விட்டவர்கள் வந்து கேட்டால் ஒப்படைத்து விடுமாறு கூறிச் சென்றுள்ளார்.மீண்டும் மருத்துவமனை யிலிருந்து திரும்பி வந்த அவர் பெட்டிக்கடைக்கு சென்று யாரேனும் வந்தார்களா என கேட்டு உள்ளார். அதற்கு யாரும் வரவில்லையென பெட்டிக்கடைகாரர் கூறிய தையடுத்து, அவரிடமி ருந்து 45 ரொக்கப் பணத்தை வாங்கிய அமுதாராணி அறந்தாங்கி காவல்நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளார்.ஏற்கனவே அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவர் கடைவீதிக்கு செல்லு ம்போது தான் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.45 காணவில்லையென புகார் கொடுத்துள்ளார்.அவரை வரவழைத்த காவல்துறையினர், பணம் தொலைந்த நேரத்தையும், கண்டெடுக்கப்பட்ட நேரத்தையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணைக்கு பிறகு 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் பெண்மணியாக இருந்தாலும் அடுத்தவ ர்களின் பணத்திற்கு ஆசை படாத பெண்மணியை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
- ரூ.4.86 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்
- அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள நகரம் ஊராட்சியில் ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது,
அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிக ளில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர்.வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஆயிஷாராணி கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி திமுக பிரதிநிக ள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
- 2,150 கிலோ பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கல்லூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58). இவர் தனது சரக்கு ஆட்டோவில் வம்பரம்பட்டி பகுதியில் 2,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து, சரக்கு ஆட்டோ மற்றும் கடத்திய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
- பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன
- திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில்களை சீரமைக்கவும், வேலி அமைக்குமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், கீரனூர் உத்தமநாதர் சுவாமி கோவிலில் சிதிலம் அடைந்திருந்த அனைத்துப் பகுதிகளும் ரூ.8.98 லட்சத்தில் புனரமைக்ககும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இரும்பநாடு சவுந்தராஜ பெருமாள் கோவில் ரூ.23.98 லட்சத்திலும், வாராப்பூர் சிவன் கோவில் ரூ.24.95 லட்சத்திலும், குடுமியான்மலை சிக்கந்தர் சுவாமி கோவில் ரூ.24.89 லட்சத்திலும், அங்குள்ள குளம் ரூ.24.3 லட்சத்திலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் லட்சுமணப்பட்டியில் உள்ள சமணர் கோவில் ரூ.12.33 லட்சத்திலும், ஆலங்குடிப்பட்டி தீர்த்தங்கரர் சிலையை சுற்றிலும் ரூ.5.16 லட்சத்தில் வேலி அமைக்கு பணியும் நடைபெற்று வ ருகின்றன. கடந்த நிதி ஆண்டில் மாவட்டத்தில் ரூ.1.22 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- வை.முத்துராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாகவாசல் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வட்டாரம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்து கர்ப்பிணி ப்பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார்.
புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ச.ராம்கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் வாகவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா முத்தையா தலைமை வகித்தார் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ்,
ஊராட்சி மன்றத் துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






