என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி நகரம் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
- ரூ.4.86 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்
- அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள நகரம் ஊராட்சியில் ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது,
அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிக ளில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர்.வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஆயிஷாராணி கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி திமுக பிரதிநிக ள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.