என் மலர்
புதுக்கோட்டை
- பாஸ்பரஸ் எலி மருந்து பயன்படுத்த நிரந்தர தடை
- புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை
புதுக்கோட்டை,
அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செ்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ெபாது மக்கள் நலன் கருதி அபாயகரமான மோனோ குரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர் பைரிபாஸ், ப்ரோபெனோ போஸ் 10 சைபர்மெத்ன், குளோர்பைரிபாஸ் 10 சைபர்மெத்ரின் ஆகிய 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகைள, கடந்த 1-ந் தேதி முதல் 60 நாட்களுக்க விற்பனை செய்வதற்கு தற்காலிக தடை விதித்தும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எலி விஷ மருந்தை பயன்படுத்த நிரந்தர தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.இத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையாளர்கள், 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகிறது. ஆய்வின்போது, தடையை மீறியது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் வரப் பெற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளத்தூர் தாலுகா மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் மதிப்பு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அல்லது எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப மாற்று இடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நரிமேடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பை சோ்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தண்ணீர் ஏற்றுவதை தனிநபர்கள் மூலம் நிறுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் அவதி அடைகிறோம். தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சத்தியமங்கலம் ஊாராட்சி சனையப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குழுமிமடை தூர்த்து போய் உள்ளது. இதனை பருவமழைக்கு முன்னதாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சார்லஸ் மனு அளித்தார்.
- பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்
- சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க அரசிற்கு உத்தரவு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான கூலித்தொழிலாளி 9-ம் வகுப்பு படித்து வந்த தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.25 ஆயிரமும், அபராத தொகையையும் வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.
- 25 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லை என்று குற்றச்சாட்டு
- மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கரிமேடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் லெட்சுமி என்பவர் மனு அளிக்க வந்தார். இரண்டு மகள்களுடன் லெட்சுமி அளித்த மனுவில், குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், 25 நாட்களாக வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய மறுப்பதாகவும் அவர் தெரித்திருந்தார்.
- தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
- கே.கே.செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஒன்றிய நகர திமுக சார்பில் கரம்பக்குடி அரசு மருத்துவமனையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஆத்மா கமிட்டி தலைவரும்மான முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னதாக கரம்பக்குடி நகர திமுக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான உ. முருகேசன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை கரம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திமுக செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும்மான வழக்கறிஞர் கேகே செல்லபாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கினர். இரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு வாழ்த்து சொல்லி சான்றிதழ் வழங்கினர். மேலும் பழங்கள் உள்ளிட்ட சத்துப் பொருட்களும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரிடம் கறம்பக்குடி மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையைப் பெற்ற மாவட்ட செயலாளர் உரிய அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முடிவில் நகர இளைஞரணி செயலாளர் ராசி பரூக் நன்றி தெரிவித்தார்.
- பணம் லாட்டரி ஆவணங்கள் பறிமுதல்
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்தித பாண்டே கிடைத்த ரகசிய தக வலின் பேரில் தனிப்படை போலீசார் செம்பட்டி விடுதி பகுதியில் ரோ ந்து பணியை ஈடுபட்டனர்.அப்போது செம்பட்டிவிடுதி நால்ரோட்டில் ஒரு டீக்கடையில் லாட்டரி சீட்டுக்கள் வைத்து விற்று கொண்டிந்திருந்த கருணாநிதி மகன் முத் து (வயது 26). என்பவரை கைது செய்தனர்.பின்னர் இவரிடம் இருந்து 3 இலக்க லாட்டரி எழுதும் தாள் -1, -1 பிள ஸ் நோட் மொபைல்-1 ,ஐ போன் -1 ரொக்கம் ரூ- 1220/-இவைகள் பறி முதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.பின்னர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- ரஜினி கட்சி ஆரம்பிக்காததால், அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்
- சசிகலா தைரியமானவர் என்று நான் கூறியதை வாபஸ் வாங்கி கொள்கிறேன்
ஆலங்குடி,
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாடா குழுமத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உப கரணங்களை வழங்கி எம்பி கார்த்திக் சிதம்பரம், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது,பிளஸ் டூ மற்றும் பிளஸ் ஒன் பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான தகவலாக உள்ளது. இது குறித்த உண்மை தன்மையை அறிய அமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுத்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சித்தாந்த ரீதியாக பாஜகவில் சேரவில்லை. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்படாததால் அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்மாநிலத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிக்குமத்திய தேர்வு ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வி நியாயமான கேள்வி நீதிமன்றத்தி ன் மூலமாக இதற்கு தீர்வு காணலாம் என்று தமிழக அரசு நம்புகிறதுசசிகலா தைரியமானவர் என்று நான் கூறி இருந்தேன் ஆனால் அதை தற்போது நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் அவர் தைரிய மாக அரசியலுக்கு வரவில்லை அதிமுக விவகாரத்தில் எடப்பாடி கையில் அனைத்து வந்துவிட்டது இரட்டை இலையை நான் குறைத்து மதிப்பிடவில்லைஅதிமுகவிற்கு என்று வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆனால் அதிமுக, பாஜகவோடு இருக்கும் வரை தொடர்ந்து மக்கள் இரண்டு கட்சிகளுமே புறக்கணித்து கொண்டே தான் இருப்பார்கள்தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.அமலாக்கத்துறை என்பது எதிர்க்கட்சிகளை அச்சு றுத்துவதற்கும் பயமுறுத்துவதற்கும் தான் தற்போது பயன்படுத்தப்ப ட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
- வேங்கை வயலில் குடிநீர் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஎம் கட்சி ஆய்வு
- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு அறிக்கை
புதுக்கோட்டை,
குடிநீர்த் தொட்டி அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பொன்னுச்சாமி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்று ஆய்வு நடத்திய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பவம் நடந்து மூன்று மாதமாகியும் குற்றவாளிகள் இதுநாள்வரை கைதுசெய்யப்படவில்லை. குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கு மாறாக பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடமே விசாரணை என்ற பெயரில், அவர்களை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகும்கூட வேங்கைவயல் மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிக்கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் மிகவும் சேதடைந்துள்ளது. இவைகளை உடனடியாக அரசு சரிசெய்ய வேண்டும்.பட்டியலின மக்களுக்கு மீண்டும் தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. அனைத்துப் பகுதி மக்களுக்கும் பொதுவான குடிநீர் இணைப்பையே அவர்கள் விரும்புகின்றனர். மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு அதுவே வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அங்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக சமூகத்தில் வலம்வர உரிய நடவடிகைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- கவுன்சிலரால் வளர்க்கப்பட்ட மருது என்ற காளை பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது
- கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் காளையின் உடல் அடக்கம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட புதுக்கோ ட்டை விடுதி ஊராட்சியை சேர்ந்தவர் உஷா செல்வம். இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார்.இந்நிலையில் இவர் மருது என்ற ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வள ர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த காளை பல்வேறு ஜல்லிக்கட் டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடி வந்துள்ளது.இந்நிலையில் நேற்று இரவு மருது என்ற காளையை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மருது காளை உயிரிழந்த து. இது காளை வளர்த்த உஷா செல்வம் மட்டுமின்றி அந்த கிராம ம க்கள் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு பெரு ம் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பின்னர் உரிய மரியாதை உடன் அந்த ஜல்லிக்கட்டு காளை உஷா செல்வம் வீட்டருகே நல்லடக்கம் செய்யப்பட்டது
- 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை அறுத்து கடத்த முயற்சி நடைபெற்று உள்ளது
- புகாரின் பேரில் கடத்தல் முயற்சி நபர்களை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்பிலான, ஒரு சந்தன மரத்தை அறுத்து சாய்த்தும் மற்ற ஐந்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்களை அறுத்தும் மர்ம நபர்கள் சாய்த்தனர். மேலும் இந்த மரங்களின் மைக்ரோ சுமார் 8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இது குறித்து, சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் சந்தன மரங்களை பாதியில் மரத்தை அறுத்து சாய்த்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது
- டெல்லியில் நடைபெற உள்ள விவசாயிகள் போராட்டத்தில் பங்கேடுக்க முடிவு
புதுக்கோட்டை,
விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டு முடிவுகளை விளக்கி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று பேரவைக்கூட்டம் நடைபெற்றது. பேரவைக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். அகில் இந்திய மாநாட்டு முடிவுகளை விளக்கி மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு உரையாற்றினார். மாவட்டக்குழு முடிவுகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் பேசினார். மாவட்டப் பொருளாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் த.அன்பழகன், எம்.வீரமணி, சி.பாண்டியன், எம்.நாராயணமூர்த்தி, ஆர்.சி.ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பிரதமர் மோடி விவசாயிகளக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஏப்.5 டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பங்கேற்கச் செய்வது என பேரவையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கொன்னையூர் முத்து மாரியம்மன்கேயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடைபெற்றது
- பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம்,பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி வெகு விமர்சையாக நடைபெறும். இன்றிலிருந்து திருவிழா கலைகட்ட தொடங்கியது. விழாவின் துவக்கமாக பூச்சொரிதல் விழா இதனை முன்னிட்டு பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும்பால்குடம் பூத்தட்டு போன்றவற்றை தங்களது பகுதியில் இருந்து எடுத்துச் சென்று அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருக்கும் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவ்விழாவையும் ஒட்டி கோவிலை சுற்றிலும் பல்வேறு பகுதிகளில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியிலும் பாதுகாப்பு பணிகளும் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.கோவில்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் வந்து செல்லும் வண்ணம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணியிடமிருந்தும் காரைக்குடி போக்குவரத்து பணிமனையில் இருந்தும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்ற வன்னமாக உள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை கோவிலின் முன்பாக அக்னி காவடி நடைபெற உள்ளது.






