என் மலர்
பெரம்பலூர்
- ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார்.
- அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.
பெரம்பலூர் :
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, மணிவிழுந்தான் அருகே ஏட்டுக்காட்டை சேர்ந்த மாதேஸ்வரனின் மகன் ஜீவா என்ற ஆனந்தராஜை (வயது 27) நாட்டு சாராயம் விற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா, தேவையூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கள்ளக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணனின் மகன் சிவா (28) மங்களமேடு போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆனந்தராஜ், சிவா ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று ஆனந்தராஜ், சிவா ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலினை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.
- பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் விபத்தில் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புது வேட்டைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66). பஞ்சாயத்து தண்ணீர் டேங்க் ஆபரேட்டராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தற்போது ஒப்பந்த அடிப்படையில் புது வேட்டைகுடி பஞ்சாயத்தில் மேற்கண்ட அதே பணிகளை கவனித்து வந்தார். வழக்கம்போல் கடந்த 1-ம் தேதி அதிகாலை பொது மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவ தற்காக புது வேட்டைகுடி -வேப்பூர் சாலையில் மொபட்டில் சென்றார்.
அப்போது எதிர்பாரா தவிதமாக ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் பெரியசா மி சிகிச்சை பலன் அளிக்கா மல் இன்று அதிகாலை இறந்தார். இது குறித்து அவரது மனைவி ராணி குன்னம் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது
- வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது
பெரம்பலூர்.
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறை பாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், க,எறையூர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பெரியவடகரை கிராமத்தில், மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் வட்டம், எழுமூர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சு.சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.சரவணன் தலைமையிலும் வருகிற 08.07.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் பனை விதைகள் மற்றும் கன்றுகள் விநியோகம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்
- மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல்
பெரம்பலூர்,
தமிழகத்தில் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடும், வரலாறோடும் இணைந்த மரமாக இருக்கிறது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணிற்கு உகந்த மரமாக திகழ்வதுடன் அடிமுதல் நுனிவரை பயனளித்து பலருக்கும் வாழ்வா தாரமாக விளங்கு கிறது. பெரம்பலூர் மாவட்ட த்தில் பனை சாகு படியை ஊக்குவி ப்பதற்கா கவும், பனை சாகுபடி செய்துவரும் விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்து வதற்காகவும் நடப்பு நிதியாண்டில் பெர ம்பலூர் மாவட்ட தோட்ட க்கலை துறைக்கு இலக்காக 30,000 பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானி யத்தில் விநியோகம் செய்ய ரூ.1,02,500- நிதி ஒதுக்கீடு பெறப்ப ட்டுள்ளது.
இத்திட்ட த்தின்கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்க ப்பட உள்ளன. பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் ,ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள், 30 கன்றுகள் 100% மானியத்தில் வழங்க ப்படும். இத்திட்டத்தில் பய னடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குநர் அலுவ லகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணை யதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.
- அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
- மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
பெரம்பலூர்,
மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். இதன் விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவைைய கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதன் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது.
இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கூறும் போது:- விலை உயர்வால் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காய்கறி விளையும் உயர்ந்துள்ள நிலையில், முக்கிய உணவுப் பொருளான அரிசி விலையும் உயர்திருப்பது பொதுமக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக வாங்கும் ெபாருட்களின் அளவைவிட குறைவாக வாங்கி செல்கின்றனர். இந்த திடீர் விலை உயர்வை கட்டுப்படுத்தி அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகளை குறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
- குரும்பலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் புரை நோய் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சூர்யா தெரிவித்துள்ளார்.
- பேரளி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பெரம்பலூர் :
பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பெரம்பலூரை அடுத்த பேரளியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, கே.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- ராணுவத்திற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 4-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
- இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.
பெரம்பலூர்:
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ஏற்கனவே கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. இன்றுடன் (புதன்கிழமை) இந்த பணிகள் நிறைவடைகிறது.
- குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஜமீன் பேரையூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரபு (வயது 29). இவர்கள் இருவரும் சிங்கபூரில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் பிரபுவிற்கு திருமணம் செய்வதற்காக பெரியசாமி மற்றும் பிரபு ஆகிய இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் பிரபு அப்பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்திவிட்டு கூத்தூர்-அரியலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் தொண்டபாடி பிரிவு பாதை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக மைல் கல் மீது மோதினார். இதில் இரத்த காயம் ஏற்பட்ட பிரபுவை அங்கிருந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பெரியசாமி குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குன்னம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த நகை திருட்டு போனது
- மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் ஆனந்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த கோவிலில் வழக்கம் போல் பூஜை நடத்துவதற்காக அதே கிராமத்தை சேர்ந்த பூசாரி தர்மலிங்கம் என்பவர் கோவிலை திறந்துள்ளார். அப்போது கோவிலில் உள்ள தகர டப்பாவினால் ஆன உண்டியல் உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.மேலும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றறை பவுன் நகைகளை காணவில்லை.
உண்டியலில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றறை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பூசாரி தர்மலிங்கம் குன்னம் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம ஆசாமிகள் கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெரம்பலூரில் ரோவர் கல்வி குழும தலைவர் டாக்டர் வரதராஜனின் 80 வது பிறந்தநாள் விழா
- வைகோ எம்.பி. சிறப்பு மலரை வெளியிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ரோவர் கல்வி குழும தலைவர் டாக்டர் வரதராஜனின் 80 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ரோவர் கல்வி நிறுவன வளாக கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு ரோவர் கல்வி குழும துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் தலைமை வகித்தார். தூய யோவான் சங்க அறக்கட்டளை இயக்குநர் மகாலெட்சூமி, இயக்குநர்கள் பவானி, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக பொதுசெயலாளர் வைகோ ரோவர் வரதராஜனின் 80-வது பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், எம்பி பாரிவேந்தர், எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்தின், தனலட்சூமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசூப்ரமணியம், கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் மித்ரா உட்பட பலர் பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் அட்சயகோபால், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், திமுக பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் பரமேஷ்குமார், வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாநில பொருளாளர் செந்திலதிபன், மாநில துணை பொதுசெயலாளர் ரொக்கையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரோவர் கல்விநிறுவன அலுவலக மேலாளர்கள் ஆனந்தன், சேகர், ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் சக்தீஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் சாய்ந்து வரும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
- உயிர் பலி ஏற்படும் முன் சீர்செய்ய வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா புதுக்குறிச்சி துணை மின் நிலைய எல்லைக்குப்பட்ட நாரணமங்கலம்-புதுக்குறிச்சி செல்லும் ஏரி பாதையில், கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம். கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்பாக அதனை சரி செய்யவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






