என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலி
- குன்னம் அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஜமீன் பேரையூரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரபு (வயது 29). இவர்கள் இருவரும் சிங்கபூரில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் பிரபுவிற்கு திருமணம் செய்வதற்காக பெரியசாமி மற்றும் பிரபு ஆகிய இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் பிரபு அப்பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையில் மது அருந்திவிட்டு கூத்தூர்-அரியலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் தொண்டபாடி பிரிவு பாதை அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக மைல் கல் மீது மோதினார். இதில் இரத்த காயம் ஏற்பட்ட பிரபுவை அங்கிருந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பெரியசாமி குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






